சென்னை: அதிரடியாக குறைந்த ஆபரணத் தங்கத்தின் விலை – நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி!
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்துள்ளது. வாரத்தின் தொடக்கத்திலேயே தங்கம் விலை குறைந்துள்ளதால் நகைப்பிரியர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
தங்கம் விலை:
கொரோனா பரவலால் விதிக்கப்பட்ட ஊரடங்கு காலம் முதல் தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பாதிப்புகள் குறைந்து மக்கள் இயல்பு நிலைக்கு திரும்ப தொடங்கியதும் தங்கம் விலை குறையும் அப்போது நகை வாங்கி கொள்ளலாம் என்று நகைப்பிரியர்கள் காத்திருந்தனர். இந்த நிலையில் அடுத்தடுத்து கொரோனா இரண்டாம் அலை, ஓமிக்ரான் தாக்கத்தினால் தங்கத்தின் மீதான முதலீடு மேன் மேலும் அதிகரித்தது. இதனால் தங்கத்தின் விலை எதிர்பார்த்த அளவு குறையவில்லை. தினந்தோறும் அதிகரித்து தான் வருகிறது.
மார்ச் மாதத்தில் 13 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை – வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு!
மேலை நாடுகளில் தங்கம் என்பது ஒரு முதலீடு தான் ஆனால் நம் நாட்டில் பெண்கள் தங்க அணிவது என்பது ஒரு வகையான கலாச்சாரமாக உள்ளது. அதனால் இந்திய மக்கள் நகைகள் வாங்குவதில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். அதிலும் குறிப்பாக தென் இந்தியாவில் தங்கத்தை வைத்துள்ள மாநிலத்தில் தமிழ்நாடு முன்னிலையில் உள்ளது. இங்கு பொதுவாக பண்டிகை, திருவிழா, சுபமுகூர்த்த தினங்களில் மக்கள் நகை வாங்குவதில் ஆர்வம் காட்டுவர். இந்த நேரத்தில் நகை விலை வழக்கத்தை விட அதிகரிக்கிறது. மேலும் தங்கத்தின் விலையானது தினசரி இரு வேளை மாற்றமடைகிறது.
தமிழகத்தில் உயர்கல்வி வரை தமிழ் வழிக்கல்வி கட்டாயம்? அரசுக்கு கோரிக்கை!
அதன்படி இன்றைய நிலவரப்படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து சவரன் ரூ.37,704-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,713-க்கு விற்பனையாகி வருகிறது. அதே போல் சென்னையில் சில்லறை வர்க்கத்தில் ஒரு கிராம் வெள்ளி ரூ.68.20க்கு விற்பனையாகி வருகிறது.