சென்னை: அதிரடியாக உயர்ந்த ஆபரணத் தங்கத்தின் விலை – நகைப்பிரியர்கள் அதிர்ச்சி!
சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.184 உயர்ந்து ஒரு சவரன் ரூ.36,200-க்கு விற்பனையாகிறது. இந்த வகையில் சில்லறை வர்க்கத்தில் வெள்ளியின் விலை ரூ.66-க்கு விற்பனையாகிறது.
தங்கத்தின் விலை உயர்வு:
நாடு முழுவதும் கொரோனா மற்றும் ஓமைக்ரான் பரவல் அதிகரித்து வருவதால் மக்கள் அதிக அச்சத்தில் உள்ளனர். கொரோனா காலகட்டத்தில் பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டதன் காரணமாக மக்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். அதனால் தற்போது பொதுமக்கள் சேமிப்பில் அதிக முக்கியத்துவம் காட்டி வருகின்றனர். இந்த வகையில் வங்கிகள் மற்றும் போஸ்ட் ஆபீஸ் சிறுசேமிப்பு திட்டங்கள், தங்கம் ஆகியவைகளில் முதலீடு செய்து வருகின்றனர். இந்த முதலீடுகள் மக்களின் கஷ்ட காலங்களில் மிகவும் உதவியாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
PF நாமினேஷன் முதல் விலைவாசி உயர்வு வரை – 2022 ஜன.1ம் தேதி வரப்போகும் 10 முக்கிய மாற்றங்கள்!
இந்தியாவில் தென் மாவட்டங்களில் உள்ள பெண்கள் அதிகம் நகை விரும்பிகளாக இருப்பர். அதனால் தங்கத்தில் தேவை மிகவும் அதிகரித்து வருகிறது. ஆனால் நவம்பர் மாதத்தில் தங்கத்தின் விலை சற்று குறைந்து காணப்பட்டது. அப்போது தீபாவளி பண்டிகைக்கு அதிக அளவில் தங்கம் மக்களால் வாங்கப்பட்டது. இந்த வகையில் நாளை புத்தாண்டை முன்னிட்டு மக்கள் தங்கம் வாங்க முனைவர்.
TNPSC குரூப் 4 VAO தேர்வுக்கு அரசு வழங்கிய Study Material – பதிவிறக்கம் செய்வது எப்படி?
இன்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.184 உயர்ந்துள்ளது. எனவே ஒரு கிராம் தங்கம் ரூ.23 உயர்ந்து, ரூ.4,525-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் ரூ.36,200-க்கு விற்பனையாகிறது. தங்கத்துக்கு அடுத்து மக்களால் விரும்பப்படும் வெள்ளியின் விலை சென்னையில் ஒரு கிராம் ரூ.66-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த தகவல் நகைப்பிரியர்கள் மற்றும் புத்தாண்டிற்கு நகை வாங்க தயாராக உள்ளவர்களுக்கு சற்று அதிர்ச்சியளிப்பதாக உள்ளது.