சென்னை: அதிரடியாக குறைந்த ஆபரணத் தங்கத்தின் விலை – நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி!
தமிழகத்தில் தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்ற, இறக்கத்துடன் மாறிக்கொண்டே வருகிறது. இதனை தொடர்ந்து இன்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சற்று குறைந்துள்ளது. இதனால் நகைப்பிரியர்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் உள்ளனர்.
தங்கத்தின் விலை குறைவு
கொரோனா கால கட்டத்தை தொடர்ந்து பொதுமக்கள் தங்களது முதலீடுகளை பாதுகாப்பான முறையில் கவனம் செலுத்த தொடங்கின. அதனால் பங்கு சந்தை, அமெரிக்க டாலர், ரியல் எஸ்டேட் என இருந்த முதலீடுகள் தற்போது தங்கத்தின் மீது அதிக முதலீடுகளை செலுத்தத் தொடங்கின. அத்துடன் நிதி நெருக்கடி ஏற்படும் போது நகைகளை அடமானம் வைத்து கடன்களை சுலபமாக பெற்று கொள்ளலாம். மேலும் தங்கத்தின் மதிப்பு கூடும் போது கடன் தொகையின் அளவும் கூடுகிறது. இதன் காரணமாக பொதுமக்கள் அதிக அளவு தங்கத்தையே வாங்கி சேமிக்க தொடங்கின.
தமிழகத்தில் டிச.22 வரை மழை பெய்யவுள்ள மாவட்டங்கள், வெப்பநிலை எச்சரிக்கை – வானிலை அறிக்கை!
மேலும் வெளிநாடுகளில் உள்ள முதலீட்டாளர்கள் தங்கத்தையே பெருமளவில் வாங்கி வருகின்றனர். இதனால் தங்கத்தின் தேவையும் அதிகரிக்கிறது விலையும் அதிகரிக்கிறது. தமிழகத்தில் தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் மாறிக்கொண்டே வருகிறது. சென்னையில் நேற்று ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.4,598க்கு விற்பனையானது. இந்நிலையில் இன்று ஒரு கிராமுக்கு ரூ.2 குறைந்து ஒரு கிராம் ரூ.4,596 விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் சவரனுக்கு இன்று ரூ.16 குறைந்துள்ளது. மேலும் சென்னையில் இன்றைய ஆபரணத் தங்கத்தின் விலை சவரன் ரூ. 36,768 ஆக உள்ளது.
தமிழ் எழுத, படிக்க தெரிந்தவர்களுக்கு அறநிலையத்துறையில் வேலைவாய்ப்பு – முழு விவரங்கள் இங்கே!
அதே போல் வெள்ளியின் விலையும் இன்று குறைந்துள்ளது. நேற்று வெள்ளியின் விலை ரூ. 66.10 என விற்பனை செய்யப்பட்டது. இன்று ஒரு கிராமுக்கு ரூ.10 காசுகள் குறைந்து ரூ.66 என விற்பனை செய்யப்படுகிறது. அதே போல் ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.66,000 என விற்பனை செய்யப்படுகிறது. இவ்வாறு இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலையில் சரிவு ஏற்பட்டுள்ளதால் வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது. இதனால் தங்கம் மற்றும் வெள்ளி நகை கடைகளில் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை சற்று அதிகரித்துள்ளது.