சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.152 குறைவு – இன்றைய நிலவரம்!
கடந்த வார முடிவில் ஏற்றத்துடன் காணப்பட்ட ஆபரணத் தங்கத்தின் விலை தற்போது குறைவை எட்டியுள்ளது. அந்த வகையில் ஆபரணத் தங்கத்தின் விலையானது சவரனுக்கு ரூ.152 குறைந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
நகை விற்பனை
பொதுவாக திருமண காலங்கள், அட்சய திருதியை, பண்டிகை காலங்களில் தங்க நகை விற்பனை எப்போதும் அதிகமாக காணப்படும். அதனால் இத்தகைய நாட்களில் நகை கடை உரிமையாளர்கள் பல்வேறு விதமான சலுகைகளை அளித்து வாடிக்கையாளர்களை கவருவது உண்டு. திருவிழா நாட்கள் அல்லாத மற்ற நாட்களில் தங்க நகை விற்பனை சற்று மந்தமாக காணப்படுவது உண்டு. இருந்தாலும் நகை மீதான ஆர்வத்தினால் பலரும் நகை வாங்குவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இந்தியாவில் ஒரே நாளில் 42,909 பேருக்கு கொரோனா – 380 பேர் உயிரிழப்பு!
அந்த வகையில் இந்த மாதம் முழுவதும் ஆபரணத் தங்கத்தின் விலையானது தினசரி ஏற்ற இறக்கத்துடன் விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த வார முடிவில் ஏற்றத்துடன் நிறைவடைந்த தங்க மார்க்கெட் நிலவரம் இந்த வார ஆரம்பத்தில் சற்று இறக்கத்துடன் துவங்கியுள்ளது. அதன்படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலையானது இன்று (ஆகஸ்ட் 30) சவரனுக்கு ரூ.152 குறைந்துள்ளது.
TN Job “FB Group” Join Now
இதன் மூலம் ஒரு சவரன் தங்க நகை ரூ.35,904 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.19 வரை குறைந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.4,488 க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் வெள்ளியின் விலையும் 30 காசுகள் வரை குறைந்து ரூ.68.40 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.