சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.384 அதிரடி உயர்வு – இன்றைய நிலவரம்!
சென்னையில் இன்று (ஆகஸ்ட் 28) ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து இரண்டாவது நாளாக உயர்ந்துள்ளது. அந்த வகையில் தங்க நகை சவரனுக்கு ரூ.384 என அதிரடி உயர்வு அடைந்து தற்போது விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
விலை உயர்வு
தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் நகை வாங்குபவர்களின் எண்ணிக்கையானது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. முன்னதாக ஊரடங்கு காலத்தில் நகை விற்பனை தடை செய்யப்பட்டிருந்த சூழலில், தற்போது பலரும் நகை வாங்குவதில் ஆர்வம் செலுத்தி வருகின்றனர். ஆனால் நகை பிரியர்களை அதிர்ச்சியளிக்கும் விதமாக தங்க நகை விலையானது தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இந்தியாவில் தீவிரமெடுக்கும் கொரோனா – ஒரே நாளில் 46,759 பேருக்கு தொற்று! 509 பேர் பலி!
இந்த வார தொடக்கத்தில் ஆபரணத் தங்கத்தின் விற்பனையில் விலை சற்று குறைவாகவே காணப்பட்டது. ஆனால் கடந்த 2 நாட்களாக ஆபரணத் தங்கத்தின் விலை அதிரடியாக உயர்ந்தது வாடிக்கையாளர்களை சற்று அதிர்ச்சியாக்கியுள்ளது. அந்த வகையில் இன்று (ஆகஸ்ட் 28) காலை தொடங்கிய தங்க நகை விற்பனையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.384 என உயர்ந்துள்ளது.
TN Job “FB Group” Join Now
இதன் மூலம் சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.36,056 க்கு விற்பனையாகிறது. இந்த விலை நேற்று (ஆகஸ்ட் 27) சவரனுக்கு ரூ.272 வரை உயர்ந்து விற்பனை செய்யப்பட்டது குறிப்பித்தக்கது. இதையடுத்து ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.48 உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.4,507 என விற்பனை செய்யப்படுகிறது. தொடர்ந்து வெள்ளி கிராமுக்கு 1 காசு வரை உயர்ந்து ரூ.68.70 க்கு விற்பனையாகிறது.