சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.272 உயர்வு – இன்றைய நிலவரம்!
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த 2 நாட்களாக குறைந்து விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், இன்று (ஆகஸ்ட் 27) மீண்டுமாக உயர்ந்துள்ளது. அந்த வகையில் ஒரே நாளில் சவரனுக்கு ரூ.272 வரை தங்கத்தின் விலை ஏற்றம் கண்டுள்ளது.
தங்க விற்பனை
தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்று தளர்வுகளாக தற்போது நகைக்கடைகள் அனைத்தும் மீண்டுமாக செயல்பட்டு வருகிறது. இதன் மூலம் 2 மாதங்களாக முடங்கி கிடந்த தங்க விற்பனை மீண்டும் துவங்கியுள்ளது. இந்த நோய் தொற்று காலத்தில் இழந்த பொருளாதாரத்தை ஈடு செய்யும் பொருட்டு ஒவ்வொரு நாளும் தங்கநகையின் விலையில் அதிரடி மாற்றங்கள் அறிவிக்கப்பட்டு வருகிறது.
Tokyo Paralympic 2020 – இந்திய வீராங்கனை பவினா படேல் காலிறுதிக்கு முன்னேற்றம்!
அந்த வகையில் கடந்த 2 நாட்களாக விலை குறைவை கண்டிருந்த ஆபரணத் தங்கத்தின் விலையால் நகைப்பிரியர்கள் பலரும் தங்க நகைகளை வாங்குவதில் ஆர்வம் காட்டி வந்தனர். இந்நிலையில் இன்று (ஆகஸ்ட் 27) தங்கத்தின் விலை மீண்டுமாக ஏற்றம் கண்டுள்ளது. அதாவது கடந்த நாட்களில் குறைக்கப்பட்ட விலையை விட சற்று அதிகமாக விலை உயர்ந்துள்ளது. சென்னையில் இன்றைய நிலவரப்படி (ஆகஸ்ட் 27) ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.272 வரை உயர்வை கண்டு ஒரு சவரன் நகை ரூ.35,872 என விற்பனை செய்யப்படுகிறது.
TN Job “FB Group” Join Now
இந்த விலை நேற்று (ஆகஸ்ட் 26) ரூ.35,648 என விற்பனையானது குறிப்பிடத்தக்கது. இதை தொடர்ந்து ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.34 அதிகரித்துள்ளது. அந்த வகையில் ஒரு கிராம் தங்கம் ரூ.4,484 என விற்பனை செய்யப்படுகிறது. மேலும் சென்னையில் வெள்ளியின் சில்லறை வர்த்தகத்தில் கிராமுக்கு 10 காசு என உயர்ந்து ரூ.67.90 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.