சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை அதிரடி சரிவு – ஒரு சவரன் ரூ.35,760க்கு விற்பனை!
சென்னையில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்து வந்த ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சரிவை சந்தித்துள்ளது. இதனால் நகைப்பிரியர்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். இன்று ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.35,760க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஆபரணத் தங்க விலை:
கொரோனா பரவலை கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு கட்டுப்பாடுகளால் நகை விற்பனை கடுமையாக பாதிக்கப்பட்டது. இருப்பினும் அதன் விலை உயர்ந்து கொண்டே சென்றது. இதற்கு காரணம் தங்கத்தின் மீதான முதலீடுகள் அதிகரித்ததே. ரியல் எஸ்டேட், ஷேர் மார்க்கெட் என பங்குகள் சரிந்த நிலையில் முதலீட்டாளர்கள் கவனம் தங்கத்தின் மீது திரும்பியது. இதனால் தினசரி விலை உயர்ந்து கொண்டே சென்றது. ஊரடங்கில் சிக்கனமாக திருமணம் உள்ளிட்ட சுப காரியங்களை நடத்த திட்டமிட்டு இருந்தவர்களும் நகை விலையை கேட்டு ஆடிப்போகினர்.
தமிழகத்தில் 6 முதல் 10ம் வகுப்பு வரை கணினி அறிவியல் பாடம் – விரைவில் அறிவிப்பு!
தற்போது கொரோனா தொற்று குறைந்து, ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வருவதால் பொருளாதாரம் மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது. இதனால் தங்கத்தின் விலையும் குறைந்து உள்ளது. சென்னையில் இன்றைய நிலவரப்படி ஒரு கிராம் ஆபரணத் தங்கம் (22 காரட்) ரூ.4,470 க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் 56 ரூபாய் குறைந்து ரூ.35,760 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதனால் நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
TN Job “FB Group” Join Now
மறுபுறம் வெள்ளியின் விலை சில்லறை வர்த்தகத்தில் எவ்வித மாற்றமும் இன்றி ஒரு கிராம் 68.40 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.68,400 ஆக உள்ளது. இதனால் தங்கம், வெள்ளி நகைகளின் விற்பனை அதிகரிக்கும் என கடை உரிமையாளர்கள் தெரிவித்து உள்ளனர்.