சென்னை: அதிரடியாக உயர்ந்த ஆபரணத் தங்கத்தின் விலை – நகை பிரியர்கள் அதிர்ச்சி!
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.48 உயர்ந்து ஒரு சவரன் ரூ.39,752 க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்று ஆபரணத் தங்கத்தின் விலை குறைந்த நிலையில் மீண்டும் இன்று அதிகரித்தது நகைப்பிரியர்கள் மத்தியில் சோகத்தை ஆழ்த்தியுள்ளது.
தங்கத்தின் விலை
கடந்த 2 வருட காலமாக கொரோனா வைரஸ் மற்றும் உக்ரைன் -ரஷ்யா போர் காரணமாக தங்கத்தின் விலை அதிகரித்து,குறைந்து இருக்கிறது. இதனால் நகைப்பிரியர்கள் அனைவரும் மிகுந்த சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். இந்த வருடம் மார்ச் மற்றும் ஏப்ரல் தங்கத்தின் விலை ஏறுமுகத்தில் மட்டுமே உள்ளது. இரண்டு வருடமாக எந்த ஒரு திருவிழாக்கள் மற்றும் திருமணத்திற்கு அனுமதி தராமல் ஊரடங்கு போடப்பட்டது. இதனால் மக்கள் நகை வாங்க முடியாமல் திணறி வந்தனர்.
இந்தியா முழுவதும் மீண்டும் முழு ஊரடங்கு அமல் – பிரதமரின் முடிவு என்ன?
மேலும் கொரோனா குறைந்து வந்த நிலையில் இந்த வருடம் எல்லா வித நிகழ்ச்சிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. இதனால் மக்கள் அனைவரும் நகைகளை வாங்க அலைமோதுகின்றனர் . அந்த வகையில் இல்லதரசிகளின் சேமிப்பு கணக்கில் நகை சீட்டு போடுவது ஒன்று. அது மட்டுமின்றி வருட வருட அட்சய திருத்தி அன்று தங்க நகை வாங்கினால் நகை பெருகும் என்பது மக்களின் நம்பிக்கை ஆகும். அதனால் தங்கத்தின் விலை எவ்வளவு அதிகரித்தாலும் நகையின் மீது உள்ள ஆசை மட்டும் குறைவதில்லை.
மேலும் நேற்று ஒரு கிராம் தங்கம் ரூ.68 குறைந்து, ரூ.4,957-க்கு விற்பனை செய்யப்பட்டது. அதைபோல வெள்ளி விலை கிராமுக்கு 1.50 பைசா குறைந்து, ரூ.73.50-க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. வெள்ளி கிலோவுக்கு ரூ.73,500-க்கு விற்பனை செய்யப்பட்டு இருக்கிறது.ஒரே நாளில் இன்று ஒரு கிராம் தங்கம் ரூ . 48 உயர்ந்து ஒரு சவரன் 39,752 ரூ.க்கு விற்பனை செய்யப்படுகிறது. சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி ரூ.73.30-க்கு விற்பனை செய்யப்படுகிறது.