சென்னை: அதிரடியாக உயர்ந்த ஆபரணத் தங்கத்தின் விலை – நகைப்பிரியர்கள் அதிர்ச்சி!
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.264 உயர்ந்துள்ளது. தொடர்ந்து உயரும் தங்கத்தின் விலை நகைப்பிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தங்கத்தின் விலை:
இந்தியாவில் கடந்த 2020ம் ஆண்டு முதல் பரவி வரும் கொரோனா பெருந்தொற்று அதனால் விதிக்கப்பட்ட ஊரடங்கு மற்றும் கட்டுப்பாடுகள் காரணமாக தொழில் துறை கடும் வீழ்ச்சியை சந்தித்தது. இதனால் முதலீட்டாளர்கள் தங்கத்தின் மீது முதலீடு செய்ய ஆர்வம் காட்டினர். மேலும் முதலீடு அதிகரித்ததன் விளைவாக தங்கத்தின் விலை எதிர்பாராத அளவு உயர்ந்தது. இந்தியாவில் விதிக்கப்பட்ட ஊரடங்கால் தங்கத்தின் இறக்குமதியும் வெகுவாக குறைந்து இதுவும் தங்கத்தின் விலை உயர்வுக்கு பெரும் காரணமாக அமைந்தது.
மீண்டும் அதிகரிக்கும் கொரோனாவால் மூடப்படும் பள்ளிகள்? அரசு முக்கிய அறிவிப்பு!
இந்தியாவை பொறுத்தவரை தென் மாநிலங்களில் தங்கம் விற்பனை அதிகளவு இருக்கும். இதில் அதிகளவிலான தங்கத்தை வைத்துள்ள மாநிலத்தில் தமிழ்நாடு முன்னிலையில் உள்ளது. இந்த நிலையில் கடந்த மாதம் நடைபெற்ற ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையேயான போர் தங்கத்தின் விலையை மென் மேலும் அதிகரித்தது. பிப்ரவரி மாதத்தின் முதல் வாரத்தில் இருந்து படிப்படியாக உயரத் தொடங்கியது. இதனால் சாமானிய மக்கள் முதல் அனைவரும் தங்கம் வாங்குவதில் பொருளாதார ரீதியான சிக்கலை எதிர்கொண்டனர்.
இன்றைய நிலவரப்படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு ரூ.33 உயர்ந்து ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.5,047 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் ஒரு சவரன் ரூ.264 உயர்ந்து ரூ.40,476க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதே போல வெள்ளியின் விலை சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் ரூ.75.20க்கு விற்பனை செய்யப்படுகிறது. வாரத்தின் தொடக்க நாளான இன்று தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது நகைப்பிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.