சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.80 உயர்வு – நகைப்பிரியர்கள் அதிர்ச்சி!
ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த சில வாரங்களாகவே உயர்ந்து கொண்டே செல்கிறது. ஏற்கனவே ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 39,568 ரூபாய்க்கு விற்பனையாகி வந்த நிலையில் தற்போது மேலும் 80 ரூபாய் அதிகரித்துள்ளது.
தங்கத்தின் விலை:
கடந்த சில வாரங்களாகவே தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. கடந்த ஒரு வாரத்தில் மட்டுமே ஆயிரம் ரூபாய்க்கும் மேல் தங்கத்தின் விலை அதிகரித்துவிட்டது. தங்கத்தின் விலை எவ்வளவு அதிகரித்துக் கொண்டே சென்றாலும் நகைப்பிரியர்கள் மற்றும் தாய்மார்கள் நகை வாங்குவதில் தான் ஆர்வம் செலுத்தி வருகின்றனர். மேலும், அவர்கள் வாங்கும் சம்பளத்தில் பாதியை தங்கத்தில் முதலீடு செய்ய விரும்புகின்றனர். மேலும் தங்கத்தில் முதலீடு செய்வதை தான் புத்திசாலித்தனமான திட்டமாக எண்ணுகின்றனர். இந்த கொரோனா காலகட்டத்தில் மட்டுமே தங்கத்தின் விலை பல ஆயிரங்கள் அதிகரித்துவிட்டது.
CSK vs RCB: வெற்றி கணக்கை துவங்குமா சென்னை சூப்பர் கிங்ஸ்? பிளேயிங் XI அணி விவரம்!
அதுமட்டுமல்லாமல் தற்போது ரஷ்யா மற்றும் உக்ரைன் போராலும் நாட்டின் ஏற்றுமதி, இறக்குமதி அனைத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பங்கு சந்தை நிலவரம் வீழ்ச்சி அடைந்துள்ளதால் தங்கத்தின் விலையும் தாறுமாறாக உயர்ந்து கொண்டிருக்கிறது. நேற்று சென்னையில் மட்டுமே 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 39,568 ரூபாய்க்கு விற்பனையாகி கொண்டிருந்தது மற்றும் ஒரு கிராம் ஆபரண தங்கத்தின் விலை 4,925 ரூபாய்க்கு விற்பனையானது. அதேபோல சென்னையில் நேற்று ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ. 71.70 ரூபாய்க்கு விற்பனையானது மற்றும் ஒரு கிலோ வெள்ளியின் விலை 71,700 ரூபாய்க்கு விற்பனையானது.
சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.39,648 -க்கு விற்பனையாகி வருகிறது. ஒரு கிராம் ஆபரண தங்கத்தின் விலை ரூ.4,956 -க்கு விற்பனையாகி வருகிறது. இதேபோல ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.1.20 உயர்ந்து ரூ.72.90-க்கு விற்பனையாகி வருகிறது மற்றும் ஒரு கிலோ வெள்ளியின் விலை 72,900 ரூபாய்க்கு விற்பனையாகி வருகிறது. கிடுகிடுவென தங்கத்தின் விலை உயர்ந்துகொண்டே செல்வதால் நகைப்பிரியர்கள் வேதனையடைந்துள்ளனர்.