சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.33 உயர்ந்து கிராமிற்கு ரூ.4,919 விற்பனை – விலை நிலவரம்!
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஏற்ற இறக்கங்களுடன் உள்ள நிலையில் நேற்றைய விலையில் படி கிராம் ரூ.4,919 க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. தங்கத்தின் விலை உயர்வால் பொதுமக்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.
தங்கத்தின் விலை:
விலை ஏற்றம், குறைவு போன்ற எந்த சூழலிலும் இந்தியர்களுக்கு தங்கத்தின் மீது இருக்கும் ஆர்வம் குறையப்போவதில்லை. உலகத்தில் இந்தியர்களுக்கு தங்கத்தின் மீதான பிரியம் குறித்து அனைவரும் அறிந்ததே. அதுமட்டுமல்லாமல் நடுத்தர வர்க்கத்தினருக்கு தங்கம் தான் சிறந்த முதலீடாகவும் உள்ளது. அவர்களின் கையிருப்புக்கு ஏற்றவாறு தங்கத்தை வாங்கி முதலீடு செய்து கொள்கின்றனர்.
தமிழகத்தில் இன்று பல இடங்களில் மிதமான மழை பெய்யும் – வானிலை ஆய்வு மையம் தகவல்!
பொதுவாக பங்கு சந்தை விலை நிலவரத்தை பொறுத்து தங்கத்தின் விலை காலை மற்றும் மாலை என்று 2 நேரங்களில் நிர்ணயிக்கப்படுகிறது. தற்போது சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்துள்ளதால் தற்போது தங்கத்தில் விலை அதிக அளவில் உயர்ந்து வருகிறது. கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கங்களுடன் உள்ள தங்கத்தின் விலையானது நேற்று சற்று அதிகரித்துள்ளது. இன்று ஞாயிறு சந்தை விடுமுறை என்பதால் நேற்றைய விலையின் அடிப்படையில் தான் இன்றைய விற்பனை நடக்கிறது.
நேற்று சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.33 உயர்ந்து ஒரு கிராம் ரூ.4,919க்கு விற்பனை செய்யப்பட்டது. இதனால் சவரனுக்கு ரூ.264 உயர்ந்து ரூ.39,352க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல் 24 காரட் சுத்த தங்கத்தின் விலை 8 கிராம் ரூ.42,544க்கு விற்பனையானது. வெள்ளியின் விலை மாற்றமின்றி கிராம் ரூ.71.50க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.71,500 ஆனது.