சென்னை : ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 400 குறைவு – இன்றைய நிலவரம்!
தமிழகத்தில் நேற்றை விட இன்று தங்கத்தின் விலை குறைந்துள்ளது. இதனால் நகைப்பிரியர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இந்த நிலையில் வெள்ளி விலை இன்று சற்று உயர்ந்துள்ளது.
தங்கம் விலை:
இந்தியாவில் கொரோனா பரவல் காரணமாக விதிக்கப்பட்ட ஊரடங்கால் அனைத்து தொழில்களும் கடுமையாக பதிக்கப்பட்டது. இந்த நிலையில் தங்கத்தின் விலை உச்சத்தை தொட்டது. மக்கள் பாதுகாப்பு கருதி தங்கத்தில் முதலீடு செய்வதை விரும்பினர். இதனால் தங்கம் விலை வரலாறு காணாத அளவு நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது. இந்த மாதம் வழக்கம் போல தங்கத்தின் விலை தொடக்கத்தில் அதிகரித்தது. இதனால் சாமானிய மக்களுக்கு தங்க நகைகள் வாங்குவது பெரும் சவாலாக இருந்து வருகிறது.
கோவை மாநகரில் கூடுதல் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல் – கொரோனா பரவல் எதிரொலி!
தங்கம் வாங்க வேண்டும் என்ற நோக்கோடு சேமிக்கும் தொகை விலையேற்றத்தால் பற்றாக்குறையாகி போகிறது. அதனால் எப்போது தங்கத்தின் விலை குறையும் என்று மக்கள் எதிர்பார்த்து வருகின்றனர். இந்த நேரத்தில் மக்களுக்கு மகிழ்ச்சி அளிக்க கூடிய செய்தியாக தங்கம் விலை குறைந்துள்ளது. நேற்று ஆபரணத் தங்கத்தின் விலை 176 ரூபாய் குறைந்து 35,440 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் அதை விட இன்று 400 ரூபாய் குறைந்து 34,920 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
தமிழகத்தில் 6 முதல் 8ம் வகுப்பு வரை அக்டோபர் முதல் வாரத்தில் பள்ளிகள் திறப்பு? வெளியான தகவல்!
நேற்று ஒரு கிராம் தங்கத்தின் விலை 4,485 ரூபாயாக இருந்த நிலையில் இன்று விலை குறைந்து ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ. 4,365 ஆக நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.1.50 குறைந்து ரூ.65.50 ஆக விற்பனை செய்யப்படுகிறது. மேலும் ஒரு கிலோ வெள்ளி 65,500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.