சென்னை: அதிரடியாக ரூ.448 உயர்ந்த ஆபரணத் தங்கத்தின் விலை – இன்றைய நிலவரம்!
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 448 ரூபாய் அதிகரித்துள்ளது. கடந்த மாதங்களில் குறைந்த தங்கத்தின் விலை இன்று மாத தொடக்கத்தில் அதிகரித்துள்ளது.
தங்கம் விலை:
மக்கள் அதிகளவு தங்கத்தில் முதலீடு செய்து வருவதால் தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மேலும் கொரோனா ஊரடங்கால் அனைத்து வியாபாரமும் முடங்கியதாலும் தங்கம் விலை அதிகரித்தது. சாமானிய மக்கள் வேலை இல்லாத காரணத்தால் சேமிப்பின்றி நகை வாங்குவதை தவிர்த்தனர். அதன் பிறகு கடந்த ஜூன் மாதம் முதல் ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை திரும்ப தொடங்கியது. அதன் தொடர்ச்சியாக வியாபாரங்களும் நடைபெற்றது. இதனால் மக்கள் தங்கம் வாங்க ஆர்வம் கட்டி வருகினற்னர்.
இந்தியாவில் எகிறும் கொரோனா – ஒரே நாளில் 26,727 பேருக்கு கொரோனா! 277 பேர் உயிரிழப்பு!
இந்த நிலையில் தங்க விலையானது ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது. கடந்த ஆடி மாதங்களில் சுப நிகழ்ச்சிகள் எதுவும் இல்லாததால் தங்கம் விலை அவ்வளவு உயரவில்லை. அதன் பின் கடந்த மாதத்தில் நாளுக்கு நாள் அதிகரித்தும் திடீரென குறைந்தும் வந்தது. நேற்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.72 குறைந்து ஒரு சவரன் ரூ.34,720 க்கும் விற்பனை செய்யப்பட்டது. மேலும் ஒரு கிராம் ரூ.4,340க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் நாளை & அக்.19ம் தேதி டாஸ்மாக் கடைகள் மூடல் – ஆட்சியர் உத்தரவு!
நேற்றைய நிலவரப்படி, தங்கத்தின் விலை சரிவை சந்தித்தது. ஆனால் இன்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.448 உயர்ந்துள்ளது. ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.4,392க்கும், சவரன் ரூ.35,136க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி ரூ.63.70க்கு விற்பனையாகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி ரூ.63.70க்கு விற்பனையாகிறது.