தமிழக மீன்வள துறைக்கு உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு – பி.டெக் படிப்பையும் சேர்க்க அனுமதி!
தமிழகத்தில் அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் மீன்வளத் துறைக்கான உதவி ஆய்வாளர் பணிக்கு குறிப்பிட்ட பாட பிரிவினரையும் விண்ணப்பிக்க அனுமதிக்க வேண்டும் என்ற மேல் முறையீட்டு வழக்கில் தீர்ப்பு வழங்கி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உயர்நீதிமன்றம் உத்தரவு:
தமிழகத்தில் அரசு துறைகளில் உள்ள காலிப்பணியிடங்கள் அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் நிரப்பப்படுகின்றது. தற்போது தமிழக மீன்வளத் துறையில் உதவி ஆய்வாளர் பணிக்கான காலியிடம் இருப்பதாக அறிவிக்கப்பட்டு அக்டோபர் 13ம் தேதி முதல் இப்பணிக்கு விண்ணப்பிக்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. இப்பணிக்கு விலங்கியல், மீன்வள அறிவியல் இளங்கலை, மீன் வள தொழில்நுட்ப டிப்ளமோ படிப்புகள் முடித்தவர்கள் தான் தகுதியானவர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
Follow our Instagram for more Latest Updates
இந்நிலையில், நாகப்பட்டினம் ஆர்.எஸ்.கீதப்பிரியா என்பவர் தான் பி.டெக்., மீன் வள என்ஜினியரிங் படிப்பை முடித்துள்ளதாகவும், மீன் வள உதவி ஆய்வாளர் பணிக்கு இந்த படிப்பு பட்டியலில் அறிவிக்கப்படவில்லை என்றும், இதனால் தன்னை போல் நூற்றுக்கணக்கான பி.டெக்., மீன் வள என்ஜினியரிங் படித்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க முடியாத நிலையில் இருப்பதாகவும், இதனால் இந்த படிப்பையும் அறிவிப்பில் சேர்க்குமாறு உத்தரவிட நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்தியாவில் உதமயாகும் Twitter Blue – மாத கட்டணம் எவ்வளவு தெரியுமா? பயனர்கள் அதிர்ச்சி!
Exams Daily Mobile App Download
வழக்கை விசாரித்த நீதிமன்றம், மனுதாரர் இது தொடர்பாக பல முறை விளக்கம் கேட்டும், கோரிக்கை வழங்கியும் சரியான பதில் அளிக்கப்படாததால், மீன் வள உதவி ஆய்வாளர் பணிக்கான படிப்பில் பி.டெக்., மீன் வள என்ஜினியரிங் படிப்பையும் சேர்த்து கொள்ள வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.