தமிழகத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்புகள் – அரசுக்கு முக்கிய வலியுறுத்தல்!

0
தமிழகத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்புகள் - அரசுக்கு முக்கிய வலியுறுத்தல்!
தமிழகத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்புகள் - அரசுக்கு முக்கிய வலியுறுத்தல்!
தமிழகத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்புகள் – அரசுக்கு முக்கிய வலியுறுத்தல்!

அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழுவில் வேலைவாய்ப்பு இருப்பதாக கூறி மோசடி கும்பல் முறைகேட்டில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த மோசடியில் ஈடுபட்டவர்களை சட்டப்படி தண்டிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

முறைகேடு:

தமிழகத்தில் கொரோனா தொற்றால் மக்கள் அதிகம் பாதிப்புக்கு உள்ளாகி சிரமப்பட்டு வருகின்றனர். நோய்த்தடுப்பு நடவடிக்கையாக விதிக்கப்பட்ட ஊரடங்கால் ஏராளமானோர் வேலையிழந்து மாத வருமானமின்றி அத்தியாவசிய பொருட்களை கூட வாங்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதற்கு மத்தியில் கடந்த மாதம் பெய்த தொடர் கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. மேலும் காய்கறிகளின் விலை அதிகரித்தது. குறிப்பாக தக்காளி ஒரு கிலோ 100 ரூபாயை தாண்டியது. இப்படி மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகியுள்ள நிலையில் அதிலிருந்து மீள மக்கள் வேலைவாய்ப்புகளை தேடி வருகின்றனர்.

தமிழகத்தில் 10, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு திருப்புதல் தேர்வு – கால அட்டவணை வெளியீடு!

இந்த நிலையில் மோசடி கும்பல் ஒன்று அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழுவில் வேலைவாய்ப்பு வழங்குவதாக கூறி வேலை நாடுநர்களை ஏமாற்றி வருகின்றனர். குறிப்பாக இந்த மோசடி கிராமப்புற இளைஞர்களை குறிவைத்து நடப்பதாக கூறுகின்றனர். இது குறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் வெளியிட்ட அறிக்கையில் மாநில ஒருங்கிணைப்பாளர், தலைமை ஆய்வு அலுவலர், வட்டார ஒருங்கிணைப்பாளர் என இல்லாத பணிகளுக்கு ஆட்களை தேர்ந்தெடுக்கும் பணியை மோசடி கும்பல் மேற்கொண்டு வருகிறது. மூன்று நட்சத்திர ஓட்டலில் இதற்கான நேர்காணல் நடைபெறுவதாகவும் தகவல்கள் வந்துள்ளது.

பூஸ்டர் கொரோனா தடுப்பூசி செலுத்த தேவையான ஆவணங்கள் – முழு விபரங்கள் இதோ!

இது குறித்து விண்ணப்பதாரர்கள் தொலைபேசியில் தொடர்பு கொண்டு விவரங்களை கேட்கின்றனர் என்று அலுவலர்கள் தெரிவிக்கின்றனர். இந்திய தொழில்நுட்ப கல்விக்குழு எந்த விதமான விளம்பரங்களையும் வெளியிடவில்லை என்று தொழில்நுட்பக் கல்விக் குழு அதிகாரி தெரிவித்துள்ளார். அதனால் அகில இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் குழு அளித்துள்ள புகாரின் அடிப்படையில் இதனை விசாரித்து மோசடியில் ஈடுபட்டவர்களை கண்டறிந்தது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்டவர் பணம் திரும்ப கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!