தமிழக மின்சார வாரியம் முக்கிய அறிவிப்பு – ஜூன் 23 மின்தடை!
நாளை மின்பராமரிப்பு பணிகளுக்காக மின்தடை செய்யப்படும் என்று மின்வாரியத்துறை அறிவித்துள்ளது. பராமரிப்பு பணிகள் முடிந்த பிறகு மின் விநியோகம் மீண்டும் தொடங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின்தடை:
தமிழகத்தில் மின்பராமரிப்பு பணிகள் கடந்த வாரம் முதல் தொடங்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகம் முழுவதும் பகுதி வாரியாக பிரிக்கப்பட்டு அனைத்து மின்பராமரிப்பு பணிகளும் நடைபெற்று வருகிறது.
TN Job “FB Group” Join Now
இரண்டு முதல் மூன்று நேரத்திற்கு மின்பராமரிப்பு செய்யும் பகுதிகளில் மின்தடை செய்யப்படும் என்று முன்னர் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, நாளை ஜூன் 23 ம் தேதி மின்தடை செய்யப்படும் பகுதிகளின் விவரங்களை மின்வாரியம் வெளியிட்டுள்ளது.
காலை 9:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை மின்தடை செய்யப்படும் பகுதிகள்:
ஸ்ரீவி., எஸ்.கொடிக்குளம், கூமாபட்டி, அத்தி கோயில், பிளவக்கல் பெரியாறு, கோவிலாறு அணை பகுதிகள், கிழவன் கோவில், நெடுங்குளம், அமச்சியார்புரம் காலனி, தாமரைக்குளம், ராமசாமியாபுரம், கான்சாபுரம், செல்லூரணி, அக்கனாபுரம், தம்பிபட்டி, அகத்தாபட்டி, துலுக்கப்பட்டி, ராமச்சந்திராபுரம், புதுார், மதுராபுரி, கல்யாணிபுரம், சுந்தரபாண்டியம், கோட்டையூர், வலையங்குளம், இலந்தைகுளம், மீனாட்சிபுரம், தைலாபுரம், நல்லூர்பட்டி, சீலநாயக்கன்பட்டி, துலுக்கப்பட்டி.
காலை 9:00 மணி முதல் மதியம் 12:00 மணி வரை மின்தடை செய்யும் பகுதிகள்:
சத்திரப்பட்டி பி.ஆர்.ஆர் நகர், வ.உ.சி நகர், பி.டி.ஆர் நகர், நத்தம்பட்டி, வரகுணராமபுரம், அம்மன் கோவில்பட்டி, போலீஸ் காலனி, ராம்கோ நகர், எஸ்.ராமலிங்காபுரம், கலங்காபேரிபுதுார், ஸ்ரீபுரம், மீனாட்சிபுரம், ஆர்.ஆர் நகர், ஆண்டாள் புரம், வேப்பங்குளம், சங்கரபாண்டியபுரம், ஆலங்குலம் கொங்கன்குளம், நதிக்குடி, ரெங்கசமுத்திரப்பட்டி, மம்சாபுரம், திருவேங்கிடபுரம், ராமன்பட்டி, காளவாசல், நாகம்மாள் நகர், மல்லாங்கிணர், வலையங்குளம், நந்திக்குண்டு, ஏ.ரெட்டியபட்டி, ஏ.கோவில்பட்டி, சந்திரன்குளம், முடியனுார்.
காலை 10:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை மின்தடை செய்யும் பகுதிகள்:
திருத்தங்கல், செங்கமலநாச்சியார்புரம், கீழதிருத்தங்கல், ஸ்டேட் பாங்க் காலனி, சாரதா நகர், கங்காகுளம் , தொழிற்பேட்டை, பூவநாதபுரம், வடபட்டி, ஈஞ்சார், நடுவபட்டி, தேவர்குளம், சிவகாசி அர்பன், அண்ணா காலனி, நேருகாலனி, முத்துராமலிங்கபுரம் காலனி, எம்.ஜி.ஆர். காலனி, லட்சம் தியேட்டர், பழைய போலீஸ் ஸ்டேஷன் தெரு, காரனேசன் காலனி, நேசனல் காலனி, லிங்கபுரம் காலனி, காமராஜபுரம் காலனி, எஸ்.எப்.ஆர்., கல்லுாரி சுற்று பகுதிகள், கங்கரக்கோட்டை, வெள்ளையாபுரம், பனையடிப்பட்டி, பல்லகவுண்டன்பட்டி, எலுமிச்சங்காய்பட்டி, அன்பின் நகரம், மரகநாதபுரம், நென்மேனி, நாருகாபுரம், அய்யம்பட்டி, சிந்துவம்பட்டி, முடித்தளை, இருக்கன்குடி ஆகிய பகுதிகள் ஆகும்.