தமிழ்நாடு மின்சார வாரியம் முக்கிய அறிவிப்பு – ஜூன் 26 மின்தடை!
தமிழகத்தில் கோவை மாவட்டம் சீரநாயக்கன்பாளையம் பகுதிகளில் வழக்கமான மின்பராமரிப்பு பணிகள் நடைபெருவதால், அதை சுற்றியுள்ள பகுதிகளில் நாளை (ஜூன் 26) காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மின்தடை
வழக்கமான மின் பராமரிப்பு பணிகளுக்காக கோவை மாவட்டம் சீரநாயக்கன்பாளையம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நாளை (ஜூன் 26) மின்தடை செய்யப்படும் என மின்வாரியம் அறிவித்துள்ளது. அதன் படி தெலுங்குபாளையம் பகுதிக்குட்பட்ட வெட்டப்பட்டு சாலை, ஆண்டிப்பாளையம், பிரியா நகர், சாஸ்தா நகர், உக்கடம் கரும்புக்கடை பகுதி, ஜேஜே கார்டன், வள்ளல் நகர், பூங்கா நகர், ஆசாத் நகர், பள்ளி வாசல் வீதி, HMDR வீதி, பெருமாள் கோவில் தெரு, ஈஸ்வரன் கோவில் வீதி, டவுன் ஹால், 5 மனை வீதி, பெரிய தெரு வீதி உள்ளிட்ட பகுதிகளில் மின் தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பேருந்துகள் இயக்கம் முதல் ஜவுளிக்கடை திறப்பு வரை – 6ம் கட்ட ஊரடங்கு தளர்வுகள்?
இவற்றில் சில பகுதிகளில் மதியம் 1 மணி வரை மின் தடை காணப்படும். அதாவது செல்வபுரம் LIC காலனி, பேரூர் மெயின் ரோடு, பூசாரி பாளையம், அன்புநகர், அருள்நகர், சாஸ்தா நகர், உக்கடம் கரும்புக்கடை பகுதி, ஜேஜே கார்டன்,போயஸ் கார்டன், சபா கார்டன் பகுதிகளில் பிற்பகல் 2 மணி வரை 4 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படும். மேலும் மயிலம்பட்டி தொழிற்பேட்டைக்குட்பட்ட செனெக்ஸ் நகர் பகுதிகளில் காலை 10 முதல் 12 வரையும், தனம் நகர், பேங்கர்ஸ் காலனி, வௌவால் தோட்டம் பகுதிகளில் 2 – 5 வரை மின் தடை காணப்படும்.
தமிழகத்தில் பாலிடெக்னிக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை – அமைச்சர் முக்கிய தகவல்!
தொடர்ந்து வெள்ளானைப்பட்டி, ஆண்டக்காபாளையம், கைக்கோப்பாளையம், மயிலம்பட்டி, சின்ன தோட்டம், PSL நகர், புதூர் பகுதிகளில் 3 முதல் மாலை 5 மணி வரையும் மின் நிறுத்தம் காணப்படும். மேலும் மதுக்கரை, புதுப்பதி, சின்னப்பதி, வாளையாறு, MV பதி, KG சாவடி, காவடிப்புதூர், நவக்கரை, திருவள்ளுவர் நகர், மாவுத்தம்பதி, முருகன்பதி உள்ளிட்ட பகுதிகளில் காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மின் தடை செய்யப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.