தமிழக மின்சார வாரியம் முக்கிய அறிவிப்பு – பொதுமக்கள் மகிழ்ச்சி!
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக ஜூலை மாத மின் கட்டணத்துடன் கூடுதல் காப்பு வைப்பு தொகை வசூலிக்க கூடாது என மின்சார வாரிய தலைமை நிதி கட்டுப்பாட்டாளர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
மின்வாரிய அறிவிப்பு:
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த மாதம் வரை கடுமையான கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டன. வீடுகளுக்கு சென்று மின்சார கணக்கீடு செய்ய முடியாது என்பதால் மக்கள் தாங்களாக கணக்கீடு செய்து மின்கட்டணத்தை செலுத்தினர். இந்நிலையில் தமிழகத்தில் புதிதாக மின் இணைப்பு பெறும் போது நுகர்வோரிடம் இருந்து காப்பு வைப்பு என்ற பெயரில் குறிப்பிட்ட தொகையை மின்வாரியம் வசூலிக்கிறது.
15 நாளில் புதிய ரேஷன் கார்டு பெறுவது எப்படி? தேவையான ஆவணங்கள் என்னென்ன?
இந்த தொகை மின்சார பயன்பாட்டை பொறுத்து இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை மாற்றப்படும். அதேபோல் மின் இணைப்பு புதிதாக வாங்கும் போது அறிவிக்கப்பட்ட மின் அளவை விட அதிக மின்சாரம் பயன்படுத்தினால் கூடுதல் காப்பு வைப்புத் தொகை வசூலிக்கப்படுகிறது. அதே நேரத்தில் தெரிவிக்கப்பட்ட அளவை விட குறைவாக மின்சாரம் பயன்படுத்தினால் எந்த கட்டணமும் வசூலிக்கப்படுவதில்லை. இந்நிலையில் 2020-21ஆம் நிதியாண்டிற்கான கூடுதல் காப்பு வைப்பு தொகை வசூலிக்கும் பணிகள் கொரோனா காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.
தற்போது கொரோனா பரவல் குறைந்து வருவதால் பல்வேறு தளர்வுகள் வழங்கப்பட்டு வருகிறது. இதையடுத்து கூடுதல் காப்பு வைப்புத் தொகை குறித்து ஆய்வு நடத்த அனைத்து மின் பகிர்மான வட்டத்தின் கண்காணிப்பு பொறியாளர்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி, மின் நுகர்வோரின் காப்பு வைப்புத் தொகை தற்போது கணக்கிடப்பட்டுள்ளதை விட குறைவாக இருப்பின் மீதமுள்ள தொகையை வசூலிக்கலாம் எனவும், அதிகமாக இருந்தால் அதனை சரி செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டுமே என்ற அச்சம் மக்களிடம் இருந்தது. ஆனால் தற்போது மின்வாரிய தலைமை நிதி கட்டுப்பாட்டாளர், ஜூலை மாத மின் கட்டணத்துடன் கூடுதல் காப்பு வைப்பு தொகை வசூலிக்கக் கூடாது என தெரிவித்துள்ளார். இதனால் மின் பயன்பாட்டிற்கான கட்டணத்தை மட்டும் தமிழக மக்கள் செலுத்தினால் போதும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.