தமிழ்நாடு மின்சார வாரியம் முக்கிய அறிவிப்பு – நுகர்வோர் கவனத்திற்கு!
தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு காரணமாக மின் அளவீடுகளை எடுக்க முடியாத காரணத்தால் பயனர்கள் தாங்களாகவே ரீடிங் எடுக்க அறிவுறுத்தப்பட்டு நிலையில், அதை செய்ய தெரியாதவர்களுக்கு மாற்று வழியை மின்வாரியம் அறிவித்துள்ளது.
மின்கட்டணம்:
தமிழகத்தில் கொரோனா தொற்று அச்சம் காரணமாக கடந்த மாதம் முதல் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலில் இருந்து வருகிறது. தீவிர கட்டுப்பாடுகளுக்கு பின்னர் மாநிலத்தில் தற்போது தொற்று பரவல் அபாயம் குறைந்துள்ளது. ஊரடங்கு கட்டுப்பாடுகளினால் மின்வாரிய ஊழியர்கள் வீடுகளுக்கு சென்று மின்சார அளவீடுகளை எடுக்கவில்லை. இதனால் எந்த அளவீட்டின் அடிப்படையில் மின்கட்டணம் செலுத்துவது என்று மக்களிடையே குழப்பம் நீடித்தது.
மத்திய அரசு ஊழியர்களுக்கு முக்கிய உத்தரவு – வழிகாட்டுதல்கள் வெளியீடு!
அதனால் பொதுமக்கள் தங்களின் வீடுகளில் உள்ள மின் மீட்டரில் உள்ள எண்களை குறித்து வைத்துக் கொண்டு மின்வாரியத்தில் சென்று மின்கட்டணம் செலுத்தலாம் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்தார். டிஜிட்டல் மீட்டரில் எந்த எண்களை குறிப்பது என்று தெரியாதவர்கள் மொபைல் போனில் புகைப்படம் எடுத்துச் சென்றும் மின்கட்டணம் செலுத்தலாம் என்றும் அவர் தெரிவித்தார். இருப்பினும் மின்கட்டண விஷயத்தில் தொடர்ந்து குழப்பங்கள் நீடிக்கிறது.
TN Job “FB Group” Join Now
தற்போது காஞ்சிபுரம் மின்வாரிய அலுவலகம், இது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, நடப்பு மாத மின் அளவீடு எடுக்க தெரியாதவர்கள் கடந்த 2019ம் ஆண்டு ஜூன் மாதம் செலுத்திய மின்கட்டணத்தை செலுத்தலாம் என்று தெரிவித்துள்ளது. மக்கள் தங்கள் மின்மீட்டரில் உள்ள ‘சி.கே.டபிள்.யூ’ என்ற எண்ணின் அளவு மற்றும் நுகர்வோரின் வரிசை எண் இவற்றம் மின்வாரிய அதிகாரிகளுக்கு வாட்ஸ்ஆப் எண்ணில் அனுப்பலாம். இதனை அவர்கள் கணக்கிட்டு மின்கட்டணத்தை மொபைல் எண்ணுக்கு அனுப்புவார்கள் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நல்லவிசயம்தருகிரது۔