தமிழக பத்திரபதிவு துறை ஆவண எழுத்தர்களுக்கு தேர்வு – அரசு உத்தரவு!

1
தமிழக பத்திரபதிவு துறை ஆவண எழுத்தர்களுக்கு தேர்வு - அரசு உத்தரவு!
தமிழக பத்திரபதிவு துறை ஆவண எழுத்தர்களுக்கு தேர்வு - அரசு உத்தரவு!
தமிழக பத்திரபதிவு துறை ஆவண எழுத்தர்களுக்கு தேர்வு – அரசு உத்தரவு!

தமிழக பத்திரப்பதிவு துறை அலுவலகத்தில் ஆவணங்களை எழுதி தரும் எழுத்தர்களுக்கு அந்த துறை சார்பாக உரிமம் வழங்கப்படுகிறது. இந்த உரிமம் பெற தேர்வு தேர்வு நடத்த வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

ஆவண எழுத்தர்:

தமிழகத்தில் பத்திர பதிவு முறை தற்போது முழுவதும் ஆன்லைன் வாயிலாக நடைபெற்று வருகிறது. இதன் மூலம் பத்திர பதிவு சார்ந்த வேலைகள் விரைவாக முடிக்கப்பட்டு வருகிறது. அதனை தொடர்ந்து அண்மையில் போலி மற்றும் மோசடி வகையிலான பத்திர பதிவுவை தடுக்கும் வகையில் சட்ட திருத்தம் செய்யப்பட்டது. அதன்படி போலி பத்திர பதிவுகளை பதிவாளரே ஆய்வு செய்து அதனை ரத்து செய்ய அதிகாரம் வழங்கப்பட்டது.

Exams Daily Mobile App Download

இந்த நிலையில் புதிய மாற்றமாக தேர்வுகள் நடத்தி அதன் மூலம் ஆவண எழுத்தர்களை நியமிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன் படி ஆவண எழுத்தர் உரிமம் வழங்க சிறப்பு பொதுத் தேர்வுகள் நடத்தப்படும். இந்த தேர்வை எளிமையான வகையில் மாநிலம் முழுவதும் ஒரே தேர்வாக நடத்த அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

பொதுத்துறை நிறுவன ஊழியர்களின் ஓய்வு வயது விவகாரம் – கேரள அரசின் முடிவு!

Follow our Instagram for more Latest Updates

இந்த தேர்வுக்கான வழிமுறைகளை பதிவுத்துறை தலைவரே தீர்மானித்துக் கொள்ளலாம். மேலும் தேர்வுக்கான வினாத்தாள்களை துறை அலுவலர்கள் ஆலோசனையின் படி தயாரித்து கொள்ளலாம் என்று அரசு தெரிவித்துள்ளது. மேலும் இந்த ஆவண எழுத்தர் உரிமத்திற்கான தகுதித் தேர்வுகளில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு வழங்கப்படும் உரிமம் 5 ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும்.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!