தமிழக கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி – பொதுமக்கள் சாலைமறியல்!

0
தமிழக கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி - பொதுமக்கள் சாலைமறியல்!
தமிழக கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி - பொதுமக்கள் சாலைமறியல்!
தமிழக கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி – பொதுமக்கள் சாலைமறியல்!

தமிழகத்தில் கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் வரை பெற்ற நகைக்கடன் தள்ளுபடி செய்வதில் பாரபட்சம் காட்டியதாக கூறி பொதுமக்கள் ரோடு மறியலில் ஈடுபட்டுள்ளனர். பிறகு நடத்திய பேச்சுவார்த்தைக்கு பிறகு கலைந்து சென்றுள்ளனர்.

நகைக்கடன் தள்ளுபடி:

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலின் போது திமுக தங்களது தேர்தல் அறிக்கையில் கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் வரை பெற்ற நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று குறிப்பிட்டிருந்தது. தற்போது திமுக ஆட்சியை பிடித்துள்ளது. மக்கள் நகைக்கடன் தள்ளுபடியை எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்தனர். இந்நிலையில் நகைக்கடன் தள்ளுபடி வழங்குவதில் பல்வேறு குளறுபடிகள் நடந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. அதாவது 5 சவரன் வரை தள்ளுபடி என்பதால் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் வெவ்வேறு கூட்டுறவு வங்கிகளில் நகைகளை 5 சவரன் வரை நகைக்கடன் பெற்றுள்ளனர்.

தமிழகத்தில் 10ம் வகுப்பு முடித்தவர்களுக்கு அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு – நவ.26 நேர்முகத்தேர்வு!

அதே போல இந்த நகைக்கடனில் இன்னும் சில குளறுபடிகள் நிகந்தது கண்டறியப்பட்டுள்ளது. அதனால் தள்ளுபடி உரிய ஏழை மக்களுக்கு மட்டும் வழங்கும் விதமாக தமிழக அரசு பல்வேறு விதிமுறைகளை வகுத்தது. அத்தகைய விதிமுறைகளின் அடிப்படையில் நகைக்கடன் தள்ளுபடி வழங்க அரசு உரிய நடவடிக்கை எடுத்து வந்தது. அதனை தொடர்ந்து தற்போது ஏற்கனவே அளிக்கப்பட்ட நகைக்கடன் தள்ளுபடி பெயர் பட்டியலில் இருந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த வெவ்வேறு வங்கிகளில் கடன் பெற்றுள்ளவர்கள் பெயர் நீக்கப்பட்டுள்ளது.

திருப்பத்தூரில் நவ.27ம் தேதி வேலைவாய்ப்பு முகாம் – 70க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் பங்கேற்பு!

மேலும் அரசு ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர், போலி நகைகளை வைத்து கடன் பெற்றவர்கள் மற்றும் வசதி படைத்தவர்கள் என அனைவரது பெயரும் நீக்கப்பட்டு நகைக்கடன் தள்ளுபடி பெற தகுதியானவர்களின் புதிய பெயர் பட்டியல் வங்கிகளுக்கு அனுப்பப்பட்டது. இந்நிலையில் தேவதானப்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் ஏற்கனவே 862 பேரின் பெயர் தள்ளுபடி பட்டியலில் இடம் பெற்றிருந்ததாகவும், தற்போது 461 பேர் மட்டும் தகுதியானவர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கூட்டுறவு வங்கி அலுவலர்கள் பாரபட்சம் காட்டுவதாக கூறி சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். பிறகு நீண்ட நேர பேச்சு வார்த்தைக்கு பிறகு அவர்கள் கலைந்து சென்றுள்ளனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!