தமிழக கூட்டுறவு வங்கி கடன் வரம்பு 15 லட்சமாக உயர்வு – அமைச்சர் அறிவிப்பு!
தமிழக கூட்டுறவு வங்கிகளில் வழங்கப்பட்டு வந்த கடன் தொகை வழங்கும் வரம்பு 10 லட்சத்திலிருந்து 15 லட்ச ரூபாயாக உயர்த்தப்படுவதாக கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி இன்று அறிவித்து உள்ளார்.
கடன் தொகை அதிகரிப்பு:
தமிழகத்தில் அரசு துறை ரீதியாக பல்வேறு மாற்றங்கள் நடந்து வருகின்றன. பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் அரசின் நிதிநிலை மோசமாக உள்ளது தெரிய வந்துள்ளது. இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் தமிழக சட்டப்பேரவை கூட்டம் முதல்வர் மற்றும் அவைத்தலைவர் தலைமையில் தொடங்கி நடந்து வருகிறது. இதில் பட்ஜெட் குறித்த விவாதங்கள் நடைபெறுகிறது.
ஜியோமி நிறுவனத்தின் சந்தைப்படுத்துதலில் புதிய யுக்தி – MI பிராண்ட் பெயர் நீக்கம்!
இதில் நேற்று ஊரக வளர்ச்சித் துறை சார்பாக விவாதங்கள் நடந்தது குறிப்பிடத்தகுந்தது. இன்றைக்கு உணவுப் பொருள் மற்றும் கூட்டுறவுத் துறை சார்ந்த விவாதங்கள் தொடங்கி நடைபெற்று வந்தன. இதற்கு பதில் அளிக்க எழுந்து பேசிய ஆத்தூர் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரும், தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சருமான ஐ. பெரியசாமி அவர்கள், மாநிலத்தில் தள்ளுபடி செய்யப்பட்ட கூட்டுறவு வங்கி கடன்களின் உண்மைத்தன்மை குறித்த ஆய்வு நடந்து வருவதாக தெரிவித்தார்.
TN Job “FB Group” Join Now
மேலும், அவர் பேசியதாவது, கூட்டுறவு வங்கியில் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் கடன் தொகை 10 லட்சத்திலிருந்து 15 லட்ச ரூபாயாக உயர்த்தப்படும் என்று அறிவித்தார். இதோடு சேர்ந்து, கணவனை இழந்த விதவை பெண்கள், கணவனால் கைவிடப்பட்ட பெண்களுக்கு கூட்டுறவு வங்கியில் இருந்து 5 சதவீதம் கடன் உதவி வழங்கப்படும் என்று தெரிவித்தார். இந்த அறிவிப்பை அடுத்து கூட்டுறவு வங்கி வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.