முதல்வர் முக ஸ்டாலின் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு – ‘பேனர் கலாச்சாரத்துக்கு முற்றுப்புள்ளி’!
உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் பேனர் கலாசாரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். திமுகவினர் இதை என் வேண்டுகோளை கட்டளையாக ஏற்றுச் செயல்படுத்த வேண்டும் என்று தமிழக முதல்வர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
பேனருக்கு முற்றுப்புள்ளி :
தமிழகத்தில் எந்த ஒரு கட்சி சார்ந்த நிகழ்வானாலும் சாலைகளில் பெரிய பேனர்கள், விளம்பர பலகைகள், போஸ்டர்கள் போன்றவைகளை வைத்து போக்குவரத்து இடையூறுதல் அளிக்கிறது. சமீபத்தில் அரசியல் பிரமுகர் ஒருவர் தன் குடும்ப விழாவிற்கு வைத்த பெரிய பேனர் திடீரென சாலையில் விழுந்து அப்பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்ற பெண் மீது விழுந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவத்திற்கு பிறகு சாலை ஓரங்களில் அனுமதியின்றி பேனர்கள் வைக்க கூடாது என்று நீதிமன்றம் அறிவுறுத்தியது.
அடுத்த 3 ஆண்டுகளுக்குள் 3,00,000 வேலைவாய்ப்புகள் – ஆன்லைன் காப்பீட்டு நிறுவனங்கள்!
ஆனாலும் விதிகளை மீறி சிலர் பேனர்கள் வைக்கின்றனர். விழுப்புரம் நன்னாடு கிராம சாலையில் திமுக கொடி கட்டப்பட்ட இரும்பு கம்பம் நாடும் போது உயர் அழுத்த மின் கம்பியில் உரசி பணியில் ஈடுபட்டிருந்த விழுப்புரம், ரஹீம் லே அவுட் பகுதியைச் சேர்ந்த ஏகாம்பரம் மகன் தினேஷ் உயிரிழந்தார். இந்த நிலையில் மின்சாரம் தாக்கி இளம் வயதான தினேஷ் மரணம் அடைந்திருப்பது எனக்குக் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
TN Job “FB Group” Join Now
திமுக நிகழ்ச்சிகளுக்காக பேனர் வைப்பது, வரவேற்பு வளைவுகள் வைப்பது, பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கக் கூடாது. உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் பேனர் கலாசாரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். திமுகவினர் இதை என் வேண்டுகோளை கட்டளையாக ஏற்று செயல்படுத்தக் கோருகிறேன் என்று முதல்வர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும் மரணமடைந்த தினேஷ் குடும்பத்திற்கு தன் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.