தமிழக தலைமை செயலகத்தில் முன்மாதிரியாக செயல்படுத்தப்பட்டுள்ள திட்டம் – பிரெய்லி முறை அமல்!
தமிழகத்தின் தலைநகரான சென்னையில் அமைந்துள்ள தலைமை செயலகத்தில் புதுமையான முறையில் அறைகளின் அறிவிப்பு பலகைகள் வடிவமைக்கப்பட்டுள்ளது.
பிரெய்லி முறை:
தமிழக அரசின் தலைமை செயலகம் சென்னையில் அமைந்துள்ளது. தமிழகத்தில் திமுக தலைமையிலான அரசு ஆட்சி பொறுப்பிற்கு வந்த பிறகு பல்வேறு துறைகளிலும் அதிரடியான பல மாற்றங்களை செய்து வருகிறது. குடும்பத்தலைவிகள், மாணவர்கள், முதியவர்கள் நலனிற்காக புதிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
அரசு ஊழியர்களுக்கு அதிரடி சம்பள உயர்வு.. ஜனவரியில் வெளியாகும் நியூ இயர் ஸ்பெஷல் அறிவுப்பு!
Exams Daily Mobile App Download
இதேபோல், உடல் ஊனமுற்றவர்களின் நலன் கருதி பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகின்றது. அந்தவகையில், தற்போது சென்னை தலைமை செயலகத்தில் அறை, படிக்கட்டுகள் மற்றும் நுழைவாயில் பகுதிகளில் பார்வையற்றவர்களுக்கு எளிதாக அடையாளம் கண்டு கொள்ளும் வகையில் பிரெய்லி முறையில் எழுத்துக்கள் அச்சிடப்பட்டுள்ளது. இதன் மூலம் பார்வையற்றவர்கள் பலரும் பயனடைந்து கொள்வார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.