தமிழகத்தில் மாணவிகளுக்கு ரூ.1000 உதவித்தொகை வழங்கும் திட்டம் – முதல்வர் இன்று தொடக்கம்!
தமிழகத்தில் அரசு பள்ளியில் பயின்ற மாணவிகளுக்கு ரூ.1000 உதவித்தொகை வழங்குவதற்கான புதுமைப்பெண் திட்டம் இன்று முதல்வர் மு.க.ஸ்டாலினால் துவங்கப்பட்டுள்ளது.
புதுமைப்பெண் திட்டம்:
தமிழக அரசு பள்ளிகளில் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயின்று மேற்படிப்பு தொடர நினைக்கும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்படும் என தமிழக அரசின் சார்பில் அறிவிக்கப்பட்டது. அதாவது, மாணவிகளின் வங்கி கணக்கிற்கே ஒவ்வொரு ஆண்டும் ரூ.1000 செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த திட்டம் குறிப்பாக மாணவிகளின் இடைநிற்றலை தவிர்ப்பதற்காகவும், அரசு பள்ளிகளில் மாணவிகளின் சேர்க்கை அதிகரிக்க வேண்டும் என்பதற்காகவும், மாணவிகள் உயர்கல்வி தொடர்வதை ஊக்குவிக்க வேண்டும் என்பதற்காக தான் அறிமுகம் செய்யப்பட்டது.
மேலும், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் மூலம் செயல்படுத்தப்படும் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித்திட்டத்தின் கீழ் தான் மாணவிகளுக்கு ரூ.1000 வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், மாணவிகளுக்கு ரூ.1000 வழங்கும் திட்டத்திற்கு புதுமைப்பெண் திட்டம் என பெயர் சூட்டப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட தற்போது வரைக்கும் ரூ.1000 உதவித்தொகை பெறுவதற்கு 4 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். மேலும், இந்த புதுமைப்பெண் திட்டத்திற்காக ரூ.698 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
ராணுவப் பள்ளிகளில் 8 ஆயிரம் ஆசிரியர் காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிக்க முழு விபரம் இதோ!
அதன்படி, ஆசிரியர் தினத்தன்று செப்டம்பர் 5 ஆம் தேதி முதல் இந்த புதுமைப்பெண் திட்டம் அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, மாணவிகளுக்கு ரூ.1000 உதவித்தொகை வழங்கும் ‘புதுமைப்பெண்’ திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார். புதுமைப்பெண் திட்டத்தை தொடங்கி வைக்கும் நிகழ்வில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கலந்துகொண்டுள்ளார். மேலும், தமிழகத்தில் 26 தகைசால் பள்ளிகள் மற்றும் 15 மாதிரி பள்ளிகளையும் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் திறந்து வைத்துள்ளார்.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்