தமிழக முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்ட வருமான வரம்பு உயர்வு – ஜன.11 முதல் அமல்!

0
தமிழக முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்ட வருமான வரம்பு உயர்வு - ஜன.11 முதல் அமல்!
தமிழக முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்ட வருமான வரம்பு உயர்வு - ஜன.11 முதல் அமல்!
தமிழக முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்ட வருமான வரம்பு உயர்வு – ஜன.11 முதல் அமல்!

தமிழகத்தில் அனைத்து மக்களின் நலன் கருதி முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டம் செயல்பாட்டில் இருந்து வருகிறது. இந்த திட்டத்திற்கான வருமான வரம்பினை தற்போது உயர்த்தி தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

காப்பீட்டு வருமான வரம்பு:

தமிழகத்தில் ஏழை, எளிய மக்களின் உடல் நலத்தை கருத்தில் கொண்டு அவர்களை பாதுகாக்கும் விதமாக முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. அதாவது உயிர்காக்கும் மருத்துவ சிகிச்சைகளை குறைந்த வருவாய் உடையவர்கள் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் பெற வேண்டும் என்ற உயரிய நோக்கில் கொண்டு வரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் இத்திட்டத்தின் கீழ் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.1 லட்சம் மதிப்பிலான சிகிச்சை இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.

பாக்கியா தொழிலில் வந்த புது பிரச்சனை, கோபியிடம் வருத்தப்பட்டு பேசிய பாக்கியா – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!

இத்தகைய சிறந்த திட்டம் கடந்த 2009ம் ஆண்டு ஆட்சியில் இருந்த முதலமைச்சர் மு.கலைஞர் அவர்களால் கொண்டுவரப்பட்டது. இந்த மருத்துவ திட்டத்தில் 1,027 சிகிச்சை முறைகளும், 154 தொடர் சிகிச்சை வழிமுறைகளும் மற்றும் 38 அறிதல் கண்டுபிடிப்பிகளும் இடம்பெற்றுள்ளன. இதன் மூலம் சுமார் 1.57 கோடி குடும்பங்கள் பயன்பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அதன்பின் கடந்த 2012ம் ஆண்டு இந்த திட்டத்தின் தொடர்ச்சியாக குடும்பத்தின் ஆண்டு வருமானம் ரூ.72,000 க்கு கீழ் உள்ள அனைவரும் இத்திட்டத்தின் மூலம் பயன்பெறும் வகையில் விரிவாக்கப்பட்டது. அன்று முதல் இன்று வரை வருமான வரம்பில் எந்தவித மாற்றமும் இல்லாமல் இருந்து வருகிறது.

டிச.31 வரை 8 மாவட்டங்களில் மட்டும் ஊரடங்கு உத்தரவு அமல் – மாநில அரசு உத்தரவு!

இந்நிலையில் தமிழகத்தில் செயல்பாட்டில் இருந்து வரும் முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டத்துடன் பிரதமரின் ‘ பிரதான் மந்திரி ஜன் ஆரோக்யா யோஜனா’ திட்டத்தினை ஒருங்கிணைத்து முதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் பயன்பெறுபவர்களுக்கு காப்பீட்டு தொகை ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட்டது. அதனை தொடர்ந்து தற்போது முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டத்தின் வருமான வரம்பை உயர்த்துமாறு வைக்கப்பட்ட கோரிக்கைகளின் அடிப்படையில் ஆண்டு வருமானம் ரூ.1,20,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த புதிய முறை வரும் ஜன.11ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என்று அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!