தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று டிஸ்சார்ஜ்? மருத்துவமனை தகவல்!
தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் கொரோனா தொற்று பரவல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது முதல்வரின் உடல்நிலை குறித்து முக்கிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. இதுகுறித்த செய்தியினை காண்போம்.
முதல்வர் உடல்நிலை:
இந்தியாவில் கடந்த இரண்டு வாரங்களாக கொரோனா பரவல் அதிகரித்து காணப்படுகிறது. மேலும் 2 நாட்களாக கொரோனா பரவல் உச்சத்தை எட்டியுள்ளது. வட மாநிலங்களில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் மாநில அரசுகளுக்கு கட்டுப்பாடுகளை அதிகரிக்குமாறு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. தமிழகத்தில் தற்போதைய திமுக அரசு ஆட்சிக்கு வந்த போது தினசரி கொரோனா பரவல் அதிகரித்து காணப்பட்டது. மேலும் தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களின் கட்டுப்பாடுகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் நோய் பரவல் கட்டுக்குள் வந்தது.
Exams Daily Mobile App Download
கடந்த சில மாதங்களாக கொரோனா பரவல் கட்டுக்குள் இருந்த நிலையில் தற்போது மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இந்நிலையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் கடந்த 12ம் தேதி கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகிய நிலையில் முதல்வர் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டதாக தெரிவித்திருந்தார். மேலும் சளி, இருமல் குறையாத காரணத்தால் சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். முதல்வரை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு நுரையீரலில் 10% சளி தொற்று இருப்பதாக தெரிவித்தனர்.
தமிழகத்தில் மாணவர்களுக்கு சிறப்பு கவுன்சிலிங் வசதி – அரசு ஏற்பாடு!
இதன் காரணமாக முதல்வரை மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதித்து சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. சிகிச்சையில் முதல்வரின் உடல்நிலை தேறி வருவதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த நிலையில் முதல்வரின் உடல்நிலை குறித்த தகவல் மற்றும் அவர் எப்போது வீட்டிற்கு திரும்புவார் என்று மக்கள் எதிர்பார்த்திருந்தனர். தற்போது முதல்வரின் உடல்நிலை முழுவதும் குணமடைந்த நிலையில் இன்று டிஸ்ஜார்ஜ் செய்யப்படுவதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்திருந்தது. அதனடிப்படையில் முதல்வர் இன்று காலை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். மேலும் முதல்வர் ஒரு வாரத்திற்கு முழு ஓய்வில் இருக்கும் படி மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.