தமிழக முதல்வர் முக ஸ்டாலின் மீண்டும் டெல்லி பயணம்? – புதிய தகவல்!
தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு தற்போது மூன்றாவது முறையாக டெல்லி பயணம் செய்ய இருக்கிறார் என்ற தகவல் வெளிவந்துள்ளது.
முதல்வரின் டெல்லி பயணம்:
தமிழக முதல்வர் முக ஸ்டாலின் கடந்த ஏப்ரல் மாதம் நடந்த சட்ட மன்ற தேர்தலில் அதிக வாக்குகளை பெற்று அபார வெற்றி அடைந்து ஆட்சியை அடைந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஆட்சி பொறுப்பேற்று 100 நாட்களை கடந்துள்ளது திமுக அரசு. இந்த முதல் 100 நாட்களில் முதல்வரின் ஆட்சியை நாடு முழுவதும் பாராட்டி உள்ளது. நாட்டிலேயே சிறப்பாக செயலாற்றிய முதல்வர் என்று பாராட்டுகளை பெற்றுள்ளார். இவரின் சிறப்பான ஆட்சியை பல தலைவர்களும் புகழ்ந்து வருகின்றனர்.
தமிழகத்தில் ஆக.,17 நிலவரப்படி 1,804 பேருக்கு கொரோனா உறுதி – சுகாதாரத்துறை தகவல்!
இந்நிலையில், தமிழக முதல்வர் ஆட்சிக்கு வந்த பின்னர் மூன்றாவது முறையாக டெல்லிக்கு பயணம் செய்ய இருக்கிறார். பொதுவாக புதிதாக பதவிக்கு வரும் முதல்வர்கள் பாரத பிரதமரை மரியாதை நிமித்தமாக சந்திப்பது வழக்கம். முக ஸ்டாலின் பதவியேற்ற பொழுது கொரோனா தொற்று பரவல் நாட்டில் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தி வந்தது. இதனால் உடனடியாக பிரதமரை முதல்வர் சந்திக்க வில்லை. பின்னர், தமிழகத்திற்கு கொரோனா தடுப்பூசி ஒதுக்கீடு மற்றும் கர்நாடகா தடுப்பணை அணை பிரச்சனை தொடர்பாக முக ஸ்டாலின் பிரதமர் மோடியை சந்தித்தார்.
TN Job “FB Group” Join Now
இரண்டாவது முறை டெல்லி சென்று குடியரசு தலைவரை சந்தித்து சட்டசபையில் கருணாநிதி பட திறப்புக்கு அழைப்பு விடுத்தார். மூன்றாவது முறையாக டெல்லி செல்ல போகும் ஸ்டாலின் இந்த முறை கட்சியின் அலுவலகத்தை திறந்து வைக்க இருக்கிறார். அப்போது, பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் பல்வேறு எதிர்க்கட்சி தலைவர்களை சந்திப்பார் என்று தகவல் வெளியாகியுள்ளது.