தமிழக மாவட்ட ஆட்சியர்களுக்கு புது உத்தரவு – முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!!
தமிழகத்தில் உள்ள மாவட்டங்களில் “கள ஆய்வில் முதலமைச்சர்” திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்நிலையில் அரசு திட்டங்கள் குறித்து மாவட்ட ஆட்சியர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
முதல்வர் உத்தரவு
தமிழக மாவட்டங்களில் நிர்வாகப் பணிகளையும், வளர்ச்சி மற்றும் நலத்திட்டப் பணிகளையும் பற்றி ஆய்வு செய்ய வருகிற பிப் 1 ஆம் தேதி, “கள ஆய்வில் முதலமைச்சர்” என்ற புதிய திட்டம் நேற்று (பிப். 1) முதல் தொடங்கப்பட்டது. இந்நிலையில் முதற்கட்டமாக இந்த திட்டத்தின் கீழ் வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மற்றும் திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். அதில் அந்த மாவட்டங்களை சேர்ந்த ஆட்சித் தலைவர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Telegram Updates for Latest Jobs & News – Join Now
இந்த ஆய்வுக் கூட்டத்தில் தலைமை செயலாளர் இறையன்பு, அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, ஏ.வ.வேலு, உள்ளிட்டோரும், துறை சார்ந்த அமைச்சர்களும் கலந்து கொண்டனர். அப்போது பேசிய முதல்வர் ஸ்டாலின், மக்களுக்கான திட்டங்கள், அவற்றின் செயல்பாடு உள்ளிட்டவை குறித்து கேட்டறிந்தேன். இன்னும் நிர்வாகம் மேம்பட வேண்டும். கள ஆய்வில் சுணக்கம் ஏற்பட்ட திட்டப் பணிகள் அடையாளம் காணப்பட்டது.
தமிழகத்தில் அரசு நிலங்கள் ஆக்கிரமிப்பு – 10 மடங்கு மின் கட்டணம் வசூலிக்க நீதிமன்றம் உத்தரவு!!
அரசின் திட்டங்கள் மக்களிடம் கொண்டு செல்லும் பொறுப்பு அரசு அலுவலர்களுக்கு உண்டு. இதற்காக பல திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டது. ஒவ்வொரு திட்டமும் பல கோடி ரூபாய் செலவில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதனை நிறைவேற்ற கால தாமதம் ஏற்படக்கூடாது என முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.