தமிழக பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலகத்தில் வேலைவாய்ப்பு – பெண்களுக்கான சூப்பர் வாய்ப்பு !
தூய்மை பணியாளர் பணியிடங்களை நிரப்ப மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை கடந்த மாதம் வெளியிட்டது. இந்த தமிழக அரசு பணிக்கு பெண் விண்ணப்பத்தார்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே தகுதியானவர்கள் 11.07.2022 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
DBCWO பணியிட விவரங்கள்:
- பெண் தூய்மை பணியாளர் பணிக்கென மொத்தம் 07 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
- இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் தமிழில் எழுத மற்றும் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.
- குறைந்தபட்ச வயதானது 18 என்றும் அதிகபட்ச வயதானது 32 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
- பெண் தூய்மை பணியாளர் பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு தொகுப்பூதியமாக மாதம் ரூ.3000/- வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் https://www.mayiladuthurai.nic.in/ என்ற இணைய முகவரியில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 11-07-2022 திங்கட் கிழமைக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.