தமிழக சட்டசபை தேர்தல் செலவு ரூ.744 கோடி – அரசாணை வெளியீடு!
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலுக்கு ரூபாய் 744 கோடி செலவிடப்பட்டுள்ளது என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
சட்டசபை தேர்தல் செலவு:
தமிழகத்தில் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை சட்டசபை தேர்தல் நடைபெற்று வருகிறது. அதன் படி 2021 ஏப்ரல் மாதம் தமிழகத்தில் கொரோனா பரவலுக்கு மத்தியில் தேர்தல் நடைபெற்றது. கொரோனா அலை வேகமெடுக்க காரணத்தால் தேர்தலை ஒத்திவைக்க வேண்டும் என பல்வேறு கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனாலும் தேர்தல் ஆணையத்தின் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 6ம் தேதி நடைபெற்றது.
BSNL வழங்கும் இலவச 4ஜி சிம் கார்டு – பெறுவது எப்படி?
மேலும் வாக்கு எண்ணிக்கை மே 2ம் தேதி தொடங்கப்பட்டது. தேர்தல் ஆணையத்தின் அதிகாரிகளால் இரவு வரை ஓட்டுகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டது. இதில் திமுக பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்கும் அதிகாரம் பெற்றது. ஓட்டுப்பதிவு மையத்தை தயார் செய்வது, ஓட்டு எண்ணிக்கை, பயணங்கள், அலுவலக செலவுகள், அதிகாரிகள் மற்றும் அலுவலர்களுக்கான ஊதியம் என தேர்தல் பணிகளுக்கு பல கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது என அரசு தகவல் தெரிவித்துள்ளது.
TN Job “FB Group” Join Now
மொத்தமாக நடந்து முடிந்த இந்த தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு ரூ.744 கோடி செலவிடப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. மேலும் கோவிட் பரிசோதனை, கிருமி நாசினி, வாக்காளர்களுக்கு கை கிளவுஸ் போன்றவைகளும் வழங்கப்பட்டது. தொலைபேசி, எரிபொருள், வாடகை வாகனம், விளம்பரம் உள்ளிட்டவைகளுக்கு ரூ.126 கோடி செலவிடப்பட்டுள்ளதாவும், மொத்தமாக ரூபாய் 744 கோடி செலவிடப்பட்டுள்ளது என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.