தமிழகத்தில் 40 நாடுகள் பங்கேற்கும் சர்வதேச புத்தக கண்காட்சி – வெளியான சூப்பர் தகவல்!!
தமிழகத்தில் முதல் முறையாக சர்வதேச புத்தக கண்காட்சி சென்னையில் 3 நாட்கள் நடைபெற உள்ளது. மேலும் இது தொடர்பான கூடுதல் தகவல்களை அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
சர்வதேச புத்தக கண்காட்சி
தமிழகத்தில் முதல் முறையாக சர்வதேச கண்காட்சி சென்னையில் வருகிற 2023ம் ஆண்டில் நடைபெற உள்ளது. இந்த கண்காட்சியை தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வி பணிகள் கழகம் இணைந்து சிறப்பாக நடத்த திட்டமிட்டுள்ளது. மேலும் இதற்காக ஜெர்மனிக்கு சென்று அங்கு நடைபெற்ற புத்தக கண்காட்சியை ஐந்து பேர் கொண்ட குழு ஆய்வு செய்து இது குறித்த அறிக்கையை அரசுக்கு சமர்ப்பித்துள்ளது. இதன் அடிப்படையில் 3 நாட்கள் கண்காட்சிகளை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
Follow our Instagram for more Latest Updates
அதன்படி இந்த புத்தக கண்காட்சியில் எழுத்தாளர்களுடன் உரையாடுவது, புத்தக வெளியீட்டாளர்களின் சந்திப்பு உள்ளிட்ட பல நிகழ்ச்சிகள் நடைபெற இருக்கின்றன. மேலும் இதில் சர்வதேச எழுத்தாளர்கள் மற்றும் நோபல் பரிசு பெற்றவர்கள் சிறப்பு விருந்தினராக வரவழைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. அத்துடன் சர்வதேச அளவில் வெளிநாட்டு எழுத்தாளர்கள் அவர்களின் புத்தகங்களை காட்சிப்படுத்தவும் விளம்பரப்படுத்தவும் முடியும்.
தமிழகத்தில் பொங்கல் பண்டிகைக்கு பம்பர் பரிசுத்தொகை உறுதி? – அதிகாரிகளுக்கு கடிதம்!
Exams Daily Mobile App Download
மேலும் இது தொடர்பாக அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளதாவது, தமிழகத்தில் முதல் முறையாக சர்வதேச புத்தகக் கண்காட்சி 40 நாடுகளை பங்கேற்க வைக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இந்த புத்தக கண்காட்சி அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 16,17,18 ஆகிய மூன்று நாட்களில் நடைபெறும் என்றும் அறிவித்துள்ளார்.