தமிழகத்தில் அவசர வேலைவாய்ப்பு அறிவிப்பு !
கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருவதால், 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களின் தேவை அதிகரித்துள்ளதை தொடர்ந்து டிரைவர் மற்றும் ஊழியர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். தகுதியும் திறமையும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பணியிடங்களுக்கான முழு விவரம் கீழே வழங்கி உள்ளோம். அதன் மூலம் அனைத்து விவரங்களையும் அறிந்து பின் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.
வேலைவாய்ப்பு செய்திகள்
வாரியத்தின் பெயர் | தமிழக அரசு |
பணிகள் | டிரைவர் மற்றும் மருத்துவ உதவியாளர் |
மொத்த பணியிடங்கள் | பல்வேறு |
கல்வி தகுதி | 10 ஆம் வகுப்பு |
நேர்காணல் நடைபெறும் நாள் | 09.07.2020 & 10.07.2020 |
காலிப்பணியிடங்கள்:
108 ஆம்புலன்ஸ் ஊழியர்களின் தேவை அதிகரித்துள்ளதை தொடர்ந்து டிரைவர் மற்றும் ஊழியர்கள் பதவிக்கு பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன.
டிரைவர் வயது வரம்பு & கல்வி தகுதி:
இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் வயதானது 24 முதல் 34 க்குள் இருக்க வேண்டும். மேலும் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி, இலகுரக வாகன டிரைவர் மற்றும் வாகன உரிமம் பெற்றவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
மருத்துவ உதவியாளர் வயது வரம்பு & கல்வி தகுதி:
இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் வயதானது 19 முதல் 30 க்குள் இருக்க வேண்டும். மேலும் பி எஸ் சி நர்சிங் அல்லது டி ஜி என் எம் முடித்தவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
தேர்வு செயல் முறை:
முதல் மற்றும் இரண்டாம் கட்ட தேர்வு தொலைபேசி வாயிலாகவும், இறுதி கட்ட தேர்வானது நேர்முக தேர்வாகவும் இருக்கும். விண்ணப்பித்தார்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர். நேர்காணல் ஆனது தொலைபேசி மூலம் நடைபெற உள்ளது. ஜூலை 9 மற்றும் 10 ஆம் தேதிகளில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெற உள்ளது.
தொலைபேசி எண்கள்:
மருத்துவ உதவியாளர் பதவி: 73977 24827
டிரைவர் பதவி: 73974 44147