தமிழக ஆதிதிராவிடர் , பழங்குடியினர் சாதி சான்றிதழ் மெய்த்தன்மை விசாரணை – அரசாணை வெளியீடு!
தமிழகத்தில் பழங்குடியின மக்களும் சமுதாயத்தில் மற்றவர்களுக்கு இணையாக முன்னேற வேண்டும் என்ற நோக்குடன் அரசு பல வகையான சட்டங்களை இயற்றி வருகிறது. அந்த வகையில் தற்போது ஏற்கனவே பிறப்பிக்கப்பட்ட சாதி சான்றிதழ் மெய் தன்மை விசாரணையில் திருத்தம் செய்யப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
அரசாணை:
தமிழகத்தில் கடந்த 2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி மொத்தம் 36 வகையான பிரிவுகளைச் சார்ந்த 7 பழங்குடியினர் இருப்பது தெரிய வந்தது. இந்த நிலையில் தமிழக அரசு சென்னை, சேலம், மதுரை மற்றும் திருச்சி ஆகிய நான்கு மண்டலங்களில் பழங்குடியினர் சாதி சான்றிதழ் மெய் தன்மை விசாரணை பிரிவுகள் அமைக்கப்பட்டது. தற்போது இது குறித்து வெளியிடப்பட்ட அரசாணை திருத்தம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.
Follow our Instagram for more Latest Updates
அதாவது சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் இயங்கி வந்த பழங்குடியினர் சாதி சான்றிதழ் மெய்த்தன்மை விசாரணை பிரிவுகளுக்கு சென்னை தலைமையிடமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதே போல சேலம், நாமக்கல், ஈரோடு, கோயம்புத்தூர், திருப்பூர், அரியலூர், பெரம்பலூர், நீலகிரி ஆகிய மாவட்டங்களுக்கு சேலம் தலைமையிடமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐடி ஊழியர்களே கவனம்…இதை செஞ்சா வேலைக்கு ஆப்பு தான் – வெளியான ரிப்போர்ட்!!
Exams Daily Mobile App Download
அதனை தொடர்ந்து மதுரை, தேனி, சிவகங்கை, விருதுநகர், தூத்துக்குடி, இராமநாதபுரம், திருநெல்வேலி, கன்னியாகுமரி, திருவாரூர், தென்காசி, திருச்சி, தஞ்சாவூர், கரூர், திண்டுக்கல், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களுக்கு மதுரை தலைமையிடமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களுக்கு வேலூர் தலைமையிடமாகவும் அறிவிக்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்