தமிழகத்தில் 6 முதல் 9ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் நடைபெறுமா? அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்!
தற்போது தீவிரமாக பரவி வரும் ஓமைக்காரன் தொற்று காரணமாக தமிழகத்தில் 6 முதல் 9 வகுப்பு மாணவர்களுக்கு தினசரி வகுப்புகள் நடத்துவது குறித்து முடிவு விரைவில் எடுக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் கூறியுள்ளார்.
ஓமைக்காரன் பரவல்
தமிழக அரசு கொரோனா பெருந்தொற்றின் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு கடந்த ஒன்றரை ஆண்டுகளாக விடுமுறை அறிவித்தது. மாணவர்கள் கல்வியை தொடர ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டன. ஆனால் தற்போது கொரோனா நோய் தடுப்பூசி மற்றும் விதிமுறைகளை பின்பற்றியதன் காரணமாக நோய் பரவல் கட்டுக்குள் வந்துவிட்டது. தற்போது கொரோனா பரவல் கட்டுக்குள் வரவழைக்கப்பட்டுள்ளதால் கடந்த செப்டம்பர் மாதம் 1-ஆம் தேதியில் இருந்து 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கியது.
TNUSRB PC தேர்வு எழுதுவோர் கவனத்திற்கு – இலவச ஆன்லைன் வகுப்புகள்!
அதை தொடர்ந்து நவம்பர் 1ஆம் தேதியிலிருந்து 1 முதல் 8ஆம் வகுப்பு வரை என அனைத்து மாணவர்களுக்கும் நேரடி வகுப்புகள் தொடங்கியது. இதனை தொடர்ந்து தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட உருமாற்றம் அடைந்த புதிய வகை கொரோனா வைரஸ் ‘ஓமைக்ரான் ‘ மிகவும் வீரியம் மிக்கதாக உள்ளது. அத்துடன் குறைந்த நாட்களில் அதிக நாடுகளில் ஓமைக்ரான் தொற்று பரவியுள்ளது. தற்போது 40-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் உலக நாடுகள் பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்து வருகின்றன. இந்தியாவிலும் பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்து வந்தது.
விஜய் டிவியின் ‘ஈரமான ரோஜாவே 2’ சீரியலில் ஜோடிகளாக இணையும் பிரபலங்கள் – உற்சாகத்தில் ரசிகர்கள்!
ஆனால் இந்தியாவிலும் தற்போது ஓமைக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. முதன்முதலில் கர்நாடக மாநிலத்தில் ஓமைக்ரான் பாதிப்பு ஏற்பட்டது. அதனை தொடர்ந்த குஜராத், மகாராஷ்டிரா, கேரளா போன்ற மாநிலத்திற்கும் பரவ தொடங்கியது. இந்நிலையில் தமிழ்நாட்டிலும் நேற்று ஒருவருக்கு ஓமைக்காரன் தொற்று உறுதி செய்யப்பட்டது. அதனால் தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதில் குறிப்பாக 6 முதல் 9 வகுப்பு மாணவர்களுக்கு தினசரி வகுப்புகள் நடத்துவது குறித்து முதல்வர் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் கூறியுள்ளார்.