தமிழகத்தில் 6 முதல் 8ம் வகுப்பு வரை அடுத்த வாரம் பள்ளிகள் திறப்பு? அரசு திட்டம்!
கொரோனா 2 ஆம் அலை பரவல் தமிழகம் முழுவதும் வெகுவாக குறைந்துள்ள நிலையில் வரும் வாரம் முதல் 6, 7 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகளை திறக்க அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
பள்ளிகள் துவக்கம்
தற்போது தமிழகம் முழுவதும் அமலில் இருக்கும் ஊரடங்கு கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் மீண்டுமாக திறக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் கடந்த 1 ஆம் தேதி முதல் அரசு வெளியிட்ட முக்கிய வழிகாட்டுதல்களை பின்பற்றி சுழற்சி முறையில் நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. என்றாலும் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் என பலரும் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அதனால் கொரோனா தொற்றால் பாதிக்கப்படும் பள்ளிகளுக்கு மட்டும் சில நாட்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது.
நெடுஞ்சாலைகளில் வாகனங்களுக்கு 60 – 100 கிமீ.,க்குள் வேகம் நிர்ணயம் – ஐகோர்ட் உத்தரவு!
இதற்கு மத்தியில் நீண்ட காலமாக திறக்கப்படாமல் இருக்கிற நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கான வகுப்புகளை துவங்க அரசு ஆலோசனை செய்து வருகிறது. அந்த வகையில் தமிழக பள்ளிக் கல்வித்துறை ஆணையர் அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களுடன் இன்று (செப்டம்பர் 14) ஆலோசனை நடத்தினார். அதே போல பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் வைத்து கல்வித்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.
Amazon நிறுவனத்தில் 1.25 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு – டெலிவரி ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு!
இந்த கூட்டத்தில் தமிழகம் முழுவதும் இருக்கும் நடுநிலை பள்ளிகளில் நேரடி வகுப்புகளை துவங்க அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அந்த வகையில் முதல் கட்டமாக 6 முதல் 8 வரையுள்ள வகுப்புகளுக்கும், அடுத்ததாக 1 முதல் 5 வரையுள்ள வகுப்புகளுக்கும் பள்ளிகளை திறக்க ஆலோசனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதே நேரத்தில் சுழற்சி முறையில் பள்ளிகளை திறப்பது, சமூக இடைவெளியை கடைபிடிப்பது போன்ற கொரோனா தடுப்பு நெறிமுறைகளை கையாளுவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.