தமிழக 12ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – பெயர் பட்டியல் திருத்தம் செய்ய வாய்ப்பு!
தமிழகத்தில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த ஜூன் மாதம் 20 ம் தேதி அன்று பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது. இதில் மாணவர்களின் பெயர் பட்டியலில் பல்வேறு திருத்தங்கள் இருப்பதாக கூறப்பட்டது. அதனால் பெயர் பட்டியலில் திருத்தம் மேற்கொள்ள அரசு தேர்வுகள் இயக்ககம் வாய்பளித்துள்ளது.
பெயர் பட்டியல் திருத்தம்:
தமிழக பள்ளிகளில் நடப்பு ஆண்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருவதால் பொதுத்தேர்வுகளை நடத்த பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டது. இதற்கான கால அட்டவணையும் வெளியிடப்பட்டது. அதில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மே 5ம் தேதி முதல் மே 28 வரை பொதுத்தேர்வு நடைபெறும் என்றும் மேலும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு மே மாதம் 6ம் தேதி முதல் 31ம் தேதி வரை பொதுத்தேர்வு நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி தேர்வுகள் நடத்தப்பட்டு கடந்த ஜூன் 20ம் தேதி பொதுத்தேர்வு முடிவுகளும் வெளியானது. இந்த பொதுத் தேர்வுகள் அறிவிப்பு வெளியானது முதல் அரசு தேர்வுகள் இயக்கம் மாணவர்களின் பெயரை பட்டியலை தயாரிக்க உத்தரவிட்டது.
Exams Daily Mobile App Download
இந்த உத்தரவின் பேரில் பள்ளி ஆசிரியர்கள் பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்களின் விவரங்களை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டனர். அதாவது பெயர், பதிவெண், பிறந்த தேதி, முகவரி, பாடம், வகுப்பு போன்றவைகள் அடங்கிய பட்டியலை தயாரித்து அரசு தேர்வுகள் இயக்கத்திற்கு அனுப்பும் பணியை மேற்கொண்டனர். இப்பணியை முறையாக செய்து முடிக்க போதுமான கால அவகாசமும் திருத்தங்கங்கள் மேற்கொள்ள வாய்ப்பும் வழங்கப்பட்டது. அப்படி இருந்தும் மேல்நிலை இரண்டாம் ஆண்டு (12) மாணவர்களின் பெயர் பட்டியலில் பல்வேறு பள்ளிகள் முழுமையாக திருத்தங்கள் மேற்கொள்ளவில்லை என்பது தெரிய வந்துள்ளது.
பவர்கிரிட் ஆணையத்தில் (PGCIL) 140+ காலிப்பணியிடங்கள் – ITI, Diploma முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!
அதனால் பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்ட 12ம் வகுப்பு மாணவர்களின் பெயர் பட்டியலில் தேர்வர்களது பெயர், தலைப்பெழுத்துகளை தமிழ் மற்றும் ஆங்கிலத்திலும், பிறந்த தேதி, பயிற்று மொழி, புகைப்படம், மொழிப்பாடம், பள்ளியின் ஆகியவற்றில் உள்ள திருத்தங்களை செய்ய அரசு தேர்வுகள் இயக்ககம் இறுதி வாய்பளித்துள்ளது. இதனை பயன்படுத்தி தேவையான மாற்றங்களை செய்ய பள்ளி நிர்வாகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளலாமல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட்ட பிறகு திருத்தம் செய்ய கோரினால் சம்மந்தப்பட்ட ஆசிரியர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.