தமிழகத்தில் 11 ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கை – வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!!

0
தமிழகத்தில் 11 ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கை - வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!!
தமிழகத்தில் 11 ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கை - வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!!
தமிழகத்தில் 11 ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கை – வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!! Tamilnadu 11th Admission

தமிழகத்தில் 2021-22ம் கல்வி ஆண்டில் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வருகின்ற ஜூன் மாத 3 வது வாரம் முதல் வகுப்புகள் தொடங்கப்படும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது அதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.

Tamilnadu 11th Admission:

தமிழகத்தில் கொரோனா நோய்பரவல் காரணமாக 2020-21 ஆம் கல்வியாண்டில் 10 ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்வின்றி தேர்ச்சி பெறுவார்கள் என்று தமிழக அரசு அறிவித்தது. இந்நிலையில் தமிழகத்தில் தற்போது புதிய கல்வி ஆண்டு தொடங்கியுள்ளது. இதனை தொடர்ந்து 10 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு 11 ஆம் வகுப்பு எப்போது தொடங்கும் என்று பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் தொடர்ந்து குழப்பம் ஏற்பட்டு வந்தது.

TN Job “FB  Group” Join Now

ssc

இந்நிலையில் தற்போது அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளி கல்வி ஆணையர் வெளியிட்டுள்ளார்.

தமிழகத்தில் இன்று 18,023 பேருக்கு கொரோனா உறுதி – 409 பேர் உயிரிழப்பு!

அதன்படி

  1. பார்வையில்‌ கண்டுள்ள சென்னை உயர்நீதிமன்ற வழக்கில்‌, தனியார்‌ சுயநிதிப்பள்ளிகளில்‌ பதினொன்றாம்‌ வகுப்பில்‌ மாணவர்‌ சேர்க்கை தொடர்பான தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
  2. தற்போது அரசு மற்றும்‌ உதவிபெறும்‌ பள்ளிகளில்‌ மேல்நிலைப்பிரிவுகளில்‌ ஏற்கெனவே சேர்க்கை அணுமதிக்கப்படும்‌ மாணவர்களின்‌ எண்ணிக்கைக்கு உட்பட்டு, மாணவர்கள்‌ சேர விருப்பம்‌ தெரிவிக்கும்‌ நிலையில்‌ அவர்களது விருப்பத்திற்கேற்றபடி பாடப்பிரிவுகளை ஒதுக்கீடு செய்யலாம்‌.
  3. அரசு மற்றும்‌ உதவிபெறும்‌ பள்ளிகளில்‌ அனுமதிக்கப்பட்டுள்ள இடங்களுக்கு மேல்‌ மாணவர்கள்‌ சேர்க்கை கோரும்‌ நிலையில்‌ கோவிட்‌-19 பெரும்தொற்று காரணமாக ஒவ்வொரு பிரிவிலும்‌ 10 முதல்‌ 15 சதவீதம்‌ கூடுதலாக மாணவர்களை சேர்த்திடலாம்‌.
  4. மிக அதிகப்படியனண விண்ணப்பங்கள்‌ எந்த பிரிவுகளுக்கு வரப்பெறுகிறதோ, அச்சூழ்நிலையில்‌ அதற்கென விண்ணப்பித்த மாணவர்களுக்கு அப்பிரிவோடு தொடர்புடைய கீழ்நிலை வகுப்பு பாடங்களிலிருந்து 50 வினாக்கள்‌ (கொள்குறிவகை) அந்தந்த பள்ளி ஆசிரியர்களால்‌ தயாரிக்கப்பட்டு, மாணவர்களுக்கு வழங்கி, அவற்றில்‌ பெறும்‌ மதிப்பெண்கள்‌ அடிப்படையில்‌ பிரிவுகளை ஒதுக்கீடு செய்யலாம்‌.
  5. பதினொன்றாம்‌ வகுப்பில்‌ சேர்க்கப்பட்ட மாணவர்களுக்கு ஜுன்‌ 3 வது வாரத்திலிருந்து அப்போது கோவிட்‌ பெருந்தொற்று குறித்த அரசின்‌ வழிகாட்டுதல்‌ அடிப்படையில்‌ வகுப்புகளைத்‌ துவங்கலாம்‌.
  6. 2021-2022 ஆம்‌ கல்வியாண்டில்‌ பன்னிரெண்டாம்‌ வகுப்பில்‌ உள்ள மாணவர்களுக்கு தொடர்ந்து கல்வி தொலைக்காட்சி, உயர்தொழில்நுட்‌ப ஆய்வகம்‌ மற்றும்‌ தொலைத்தொடர்பு முறைகளில்‌ பாடங்களை நடத்த ஆரம்பிக்கலாம்‌.

மேற்குறிப்பிட்டுள்ள வழிகாட்டுதல்‌ அடிப்படையில்‌, பன்னிரெண்டாம்‌ வகுப்பு மாணவர்‌ சேர்க்கையினை நடத்திட அனைத்துத்‌ தலைமையாசிரியர்களுக்கும்‌ தெரிவித்திட அனைத்து முதன்மைக்கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்‌.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!