தமிழகத்தில் உயர்கல்வி வரை தமிழ் வழிக்கல்வி கட்டாயம்? அரசுக்கு கோரிக்கை!
தமிழ்நாட்டில் உயர்கல்வி வரை தமிழ்வழிக் கல்வியை கட்டாயமாக்க சட்டம் இயற்ற தமிழக அரசு முன்வர வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை எழுந்துள்ளது. மேலும் தமிழ் வழியில் படிப்பவர்களுக்கு சிறப்பு ஊக்கத்தொகை வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் மொழி:
தமிழகத்தில் தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் அரசு பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் தமிழ் மொழி கல்வியை கொண்டு வரவேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் அரசை வலியுறுத்தியுள்ளார். மேலும் பிப்ரவரி 21ம் தேதி உலக தாய்மொழி தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தமிழ் நாட்டில் தமிழ்வழிக்கல்வி இன்னும் கனவாகவே நீடிப்பது கவலையளிக்கிறது என்று அவர் தெரிவித்துள்ளார். நம் தாய்மொழியான தமிழுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்பது குறித்து பாமக நிறுவனர் வெளியிட்ட செய்தி குறிப்பில், தமிழ் மொழியைக் காக்க நூற்றுக்கணக்கானோர் உயிர் தியாகம் செய்த நம் மாநிலத்தில் தமிழ் மொழிக்கு இன்னும் உரிய அங்கீகாரம் அளிக்கப்படவில்லை என்று அவர் வேதனை தெரிவித்துள்ளார்.
மார்ச் 8 வரை பள்ளி & கல்லூரிகளை சுற்றி தடை உத்தரவு நீட்டிப்பு – மாநகர காவல்துறை அறிவிப்பு!
தற்போது தமிழ் மொழிக்கும், தமிழ் மக்களுக்கும் முக்கியத்துவம் அளிக்கும் வகையில் TNPSC போட்டித் தேர்வுகளில் தமிழ் மொழித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும் 100 மதிப்பெண்கள் அடங்கிய இத்தேர்வில் 40% மதிப்பெண் பெறுவது அவசியமாகும். ஏனெனில் இந்த தமிழ் மொழித்தேர்வு தகுதித்தேர்வாக கருத்தில் கொள்ளப்படும் என்று அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அது போல தமிழகத்தில் உயர்கல்வி வரை தமிழ்வழிக் கல்வியை கட்டாயமாக்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
PF கணக்குதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு – அடிப்படை ஊதியம் அதிகம் பெறுபவர்களுக்கு புதிய ஓய்வூதியம்!
மேலும் தொழில் நுட்பத்திலும் வளர்ச்சி அடைந்த நாடுகளில் கூட தாய்மொழியில் தான் கல்வி கற்பிக்கப்படுகிறது. ஆனால் நமது மாநிலத்தில் அது இல்லை. தமிழகத்தில் தமிழ்வழிக் கல்வியை கட்டாயமாக்காமல் தாய்மொழி தினத்தை கொண்டாடுவதால் என்ன பயன்என்று கேள்வி எழுப்பியுள்ளார். மற்ற நாடுகளை போல தமிழ்நாட்டிலும் உயர்கல்வி வரை தமிழ் மொழியில் கற்பிக்கப்பட வேண்டும். அன்றய நாள் தான் தமிழர்களுக்கு பொன்நாள் என்று அவர் கூறியுள்ளார். 10ம் வகுப்பு வரை தமிழை கட்டாயப் பாடமாக்கும் சட்டத்தை செம்மையாக செயல்படுத்தவும். மேலும் தமிழ் வழியில் படிப்பவர்களுக்கு சிறப்பு ஊக்கத்தொகை வழங்க வேண்டும்.