அரசு போட்டித் தேர்வுகளில் ‘தமிழ் மொழி’ கட்டாயம் – தமிழக அரசு அறிவிப்பு!
தமிழகத்தில் நடத்தப்படும் போட்டித் தேர்வுகளில் தமிழ் மொழி பாடத்தாள் கட்டாயம் என சட்டப்பேரவையில் மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.
தமிழ் மொழி:
தமிழகத்தில் திமுக தலைமையிலான அரசு ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து பல்வேறு மாற்றங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது. தற்போது சட்டப்பேரவை கூட்டம் நடைபெற்று வரும் நிலையில் தினசரி துறை வாரியாக மானிய கோரிக்கை விவாதங்கள் நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகின்றன. இன்று காவல்துறைக்கென சூப்பர் திட்டங்களை முதல்வர் அவர்கள் வெளியிட்டார்.
தமிழகத்தில் பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை – நீட் தேர்வு மசோதா தாக்கல்!
மேலும் 5 சவரன் வரை நகைக்கடன் தள்ளுபடி, காவலர்கள் அரசு பேருந்துகளில் பயணம் செய்ய அட்டை உள்ளிட்ட அறிவிப்புகள் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதனை தொடர்ந்து மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள் உரையாற்றினார். அதில் தமிழகத்தில் இனி நடைபெறும் போட்டித் தேர்வுகளில் தமிழ் மொழி பாடத்தாள் தகுதித்தேர்வு கட்டாயம் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
Wipro நிறுவனத்தில் முடிவுக்கு வந்த WFH முறை – தலைவர் அறிவிப்பு!
தேர்வு முகமைகளால் நடத்தப்படும் அனைத்து போட்டித் தேர்வுகளிலும் இந்த விதிமுறை கட்டாயம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதுமட்டுமின்றி அரசு பணிகளுக்கான போட்டித்தேர்வுகள் தாமதமானால் நேரடி நியமன வயது உச்சவரம்பு 2 ஆண்டாக அதிகரிக்கப்பட்டுள்ளது எனவும் கூறப்பட்டு உள்ளது.