TNPSC தேர்வர்களுக்கு சூப்பர் அறிவிப்பு – தமிழ் பாடத்திட்டத்தில் திராவிட சுயமரியாதை இயக்கம்!
தமிழகத்தில் அரசுப் பணிகளில் தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு அதிக பணியிடங்கள் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு போட்டி தேர்வுகளில் தமிழ்மொழி தகுதித் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதற்கான பாடத்திட்டத்தை தற்போது இணையதளத்தில் TNPSC தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.
தமிழ்மொழி தகுதித் தேர்வு
தமிழகத்தில் அரசு அலுவலகங்களில் பணியாளர்களை TNPSC தேர்வாணையம் நடத்தும் குருப்-1, குருப்-2 மற்றும் 2-ஏ, குருப்-4 உள்ளிட்ட 32 வகையான தேர்வுகள் மூலமாக தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். இத்தேர்வுகளில் அதிக அளவில் வடமாநிலத்தவர்கள் தேர்ச்சி பெற்று வந்தனர். அதனால் தமிழக அரசு இதனை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதில் குறிப்பாக தற்போது TNPSC நடத்தும் அனைத்து போட்டித் தேர்வுகளிலும் தமிழ் மொழி தகுதித் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
தமிழக கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி – பொங்கலுக்கு வெளியாகும் அறிவிப்பு!
அத்துடன் இன்று தமிழ் மொழி தகுதித் தேர்வுக்கான பாடத்திட்டத்தையும் மற்றும் மாதிரி வினாத்தாள் விவரங்களையும் தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. அதில் தமிழ் மற்றும் ஆங்கிலம் இடையே மொழி பெயர்த்தல், சுருக்கி எழுதுதல், பொருள் உணர்வது, சுருக்க குறிப்பில் இருந்து விரிவாக்கம் செய்தல், கட்டுரை எழுதுவது, அலுவல் ரீதியான கடிதம் எழுதுவது போன்றவை இடம்பெற்று உள்ளது. இவ்வாறு தமிழ் மொழி பற்றிய அறிவை வளர்த்துக் கொள்ள தேவையானவற்றை இந்த வினாத்தாள் வழங்கும் விதமாக உள்ளது.
சர்வதேச ஹாக்கி தரவரிசை பட்டியல் – 3வது இடம் பிடித்த இந்திய அணி! ரசிகர்கள் உற்சாகம்!
அத்துடன் இந்த பாடத்திட்டத்தில் நடப்பு நிகழ்வுகள், சமுதாய பிரச்சனைகள், திராவிட சுயமரியாதை இயக்கம், பகுத்தறிவு இயக்கம் போன்ற படங்கள் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து இந்த வினாத்தாளில் கட்டுரை எழுதுதல், பிரித்தெழுதுதல், ஒரே தொடர் அமைத்தல், எதிர்மறை வாக்கியம் அமைத்தல், பிழை நீக்குதல் போன்ற கேள்விகளும் இடம் பெற்றுள்ளது. இவ்வாறு தமிழ் மொழியைப் பற்றிய கேள்விகள் கேட்கப்படுவதன் மூலமாக தமிழகத்தை சேர்ந்தவருக்கு அதிக வாய்ப்புகள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.