தமிழக ரயில்வே ஊழியர்களுக்கு புதிய உத்தரவு – ரயில்வே பொது மேலாளர் அறிவிப்பு!!
தமிழகத்தில் ரயில்வே துறையில் பணிபுரிந்து வரும் பணியாளர்களுக்கு கட்டாயம் தமிழ் தெரிந்திருக்க வேண்டும் என தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் தெரிவித்துள்ளார்.
ரயில்வே ஊழியர்கள்:
இந்திய இரயில்வே, அரசின் பொதுத்துறை நிறுவனம் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. மேலும் உலக அளவில் உள்ள மிகப்பெரிய தொடர்வண்டி வலையமைப்புகளில் ஒன்றாக இந்திய ரயில்வே இருக்கிறது. இந்நிலையில் தமிழகத்தில் ரயில்வே துறையில் தமிழர்கள் அதிகம் பணியில் இல்லை என்ற புகார் எழுந்த வண்ணம் இருக்கிறது. அரசும் தமிழர்கள் ரயில்வே பணியில் இருக்க வேண்டும் என்பதால் பல முயற்சிகளை செய்து வருகிறது. இந்நிலையில் தெற்கு ரயில்வே பொது மேலாளர் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
TNPSC தேர்வில் கொண்டு வரப்பட்ட புதிய நிபந்தனை – தவிக்கும் தமிழக மாணவர்கள்!!
Follow our Instagram for more Latest Updates
அதன் படி தமிழ்நாட்டில் பணியாற்றும் ரயில்வே பணியாளர்களுக்கு கண்டிப்பாக தமிழ் தெரிந்திருக்க வேண்டும் எனவும், பிராந்திய மொழிகளை கற்றுக்கொள்ள பயிற்சி அளிக்கப்படும் என தெரிவித்துள்ளார். மேலும் இந்திய ரயில்வே துறையின் சார்பாக தென்னக ரயில்வேயில் பணியமர்த்தப்படும் பணியாளர்கள் பெரும்பாலானோர் வட இந்தியர்களாகவே இருப்பதால், அவர்கள் தமிழக பயணிகளிடம் ஹிந்தியில் பேசுவதாலும், சரியான முறையில் தமிழில் பதிலளிக்க முடியாததாலும் பெரும் பிரச்சனை ஏற்படுகிறது.
இதனை சரி செய்யவே தற்போது தமிழகத்தில் வேலை செய்யும் ரயில்வே ஊழியர்கள் தமிழ் தெரிந்திருக்க வேண்டும் என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அவர் வெளியிட்ட உத்தரவில் டிக்கெட் இல்லாமல் பயணிக்கும் வெளிமாநிலத்தவர்கள் கண்டிப்பாக தண்டிக்கப்படுவார்கள் என தெரிவித்துள்ளார்.