தமிழக பொறியியல் கல்லூரிகளில் தமிழ் கட்டாயம் – அமைச்சர் அறிவிப்பு!

0
தமிழக பொறியியல் கல்லூரிகளில் தமிழ் கட்டாயம் - அமைச்சர் அறிவிப்பு!
தமிழக பொறியியல் கல்லூரிகளில் தமிழ் கட்டாயம் - அமைச்சர் அறிவிப்பு!
தமிழக பொறியியல் கல்லூரிகளில் தமிழ் கட்டாயம் – அமைச்சர் அறிவிப்பு!

தமிழகத்தில் பொறியியல் மற்றும் மருத்துவ படிப்பிற்கான புத்தகங்கள் தமிழில் மொழியில் பெயர்க்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பொறியியல் கல்லூரிகளில் மாணவர்களுக்கு நடப்பு கல்வியாண்டு முதல் தமிழ் மொழி பாடம் கட்டாயம் என்று அமைச்சர் அறிவித்துள்ளார்.

தமிழ் மொழி பாடம்:

தமிழகத்தில் நடப்பு ஆண்டு முதல் TNPSC தேர்வுகளில் தமிழ் மொழி தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வில் 40 மதிப்பெண்கள் பெற்றால் மட்டுமே உங்களின் அடுத்த பாடப்பகுதி விடைகள் மதிப்பீடு செய்யப்படும் என்றும் தேர்வாணையம் தெரிவித்துள்ளது. அதனைத்தொடர்ந்து தமிழ் வழியில் அரசு பள்ளியில் பயின்ற மாணவிகள் உயர்கல்விக்காக கல்லூரி செல்லும் அவர்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 ஊக்கத் தொகையாக வழங்கப்படும் என்றும் அரசு அறிவித்துள்ளது.

Exams Daily Mobile App Download

அத்துடன் மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்பிற்கான பாடங்களை தமிழ் வழியில் பள்ளிக் கல்வி முடித்த மாணவர்கள் எளிமையாக படிக்கும் வகையில் புத்தகங்கள் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டும் வருகிறது. இவ்வாறு தமிழகம் தொடர்ந்து நம் தாய்மொழியான தமிழுக்கு முன்னுரிமை அளித்து வருகிறது. அந்த வகையில் தற்போது தமிழகத்தில் பொறியியல் கல்லூரிகளில் தமிழ் மொழி பாடம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

டெட் 2 ஆம் தாள் தேர்வு குறித்த முக்கிய அறிவிப்பு – கணினி வழியில் நடத்த திட்டம்!

Follow our Instagram for more Latest Updates

இது குறித்து தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில் 2022 – 2023ம் கல்வியாண்டில் இருந்து தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பொறியியல் கல்லூரிகளில் முதல் மற்றும் இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கு தமிழ் மொழிப்பாடம் கட்டாய பாடமாக நடைமுறைப்படுத்தப்படும் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!