மார்ச் 16 முதல் ரயில் சேவையில் மாற்றம் – முக்கிய அறிவிப்பு!!
தெற்கு ரயில்வே நிர்வாகத்தின் கீழ் இயங்கும் குறிப்பிட்ட ரயில்கள் வரும் மார்ச் 16 ஆம் தேதி முதல் செயல்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அந்த்யோதயா ரயில் சேவையிலும் மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
ரயில் சேவையில் மாற்றம்
தினந்தோறும் சென்னையில் இருந்து தெற்கு மார்க்கமாக இயக்கப்படும் ஒரு முக்கிய ரயில் சேவை அந்த்யோதயா. இந்த ரயில் தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு கும்பகோணம் மார்க்கமாக நாகர்கோவில் வரை இயக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையில், அந்த்யோதயா ரயில் சேவை அடுத்து வரும் சில நாட்களுக்கு திருநெல்வேலி மட்டுமே இயக்கப்படுவதாக அறிவிப்புகள் வெளியாகியுள்ளது. அதாவது, நாங்குநேரி – மேலப்பாளையம் இடையே பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் தாம்பரம் – நாகர்கோவில் இடையிலான அந்த்யோதயா ரயில் சேவையில் மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
Follow our Instagram for more Latest Updates
பயனர்கள் கவனத்திற்கு – புதிய ஆதார் கார்டு பெறுவதற்கான எளிய வழிமுறைகள்!!
அதன்படி, மார்ச் 16, 17, 18, 19, 20, 21 ஆகிய தேதிகளில் அந்த்யோதயா ரயில் தாம்பரத்தில் இருந்து திருநெல்வேலி வரை மட்டுமே இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே போல, மார்ச் 17 ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி வரை நெல்லையில் இருந்து தாம்பரத்திற்கு அந்த்யோதயா ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மார்ச் 17 முதல் 22 ஆம் தேதி வரைக்கும் திருவனந்தபுரம் முதல் திருச்சி வரை செல்லும் ரயில் நெல்லையில் இருந்து இயக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.