மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும் நகராட்சிகள் – தமிழக அரசு உத்தரவு!!
பெருநகர சென்னை மாநகராட்சியில் உள்ள தாம்பரம் நகராட்சி தற்போது மாநகராட்சியாக தகுதி பெற்றுள்ளது. அதன் படி தமிழகத்தில் உள்ள 16வது மாநகராட்சியாக தாம்பரம் இடம்பெற்றுள்ளது.
தாம்பரம் மாநகராட்சி:
பெருநகர சென்னை மாநகராட்சி தமிழகத்தில் உள்ள மிகப் பழமையான மாநகராட்சி ஆகும். இது 1688 செப்டம்பர் 29 ஆம் தேதி உருவாக்கப்பட்டது. சென்னை நகராண்மை கழகம் என்னும் பெயரில் இந்தியா விடுதலை அடையும் வரை செயல்பட்டது. சென்னை மாநகராட்சியின் ஆண்டு வருமானம் கிட்டத்தட்ட 1875 கோடி ரூபாய் ஆகும். இது தமிழக மாநகராட்சிகளில் வரி வருவாயில் முதலிடத்தை கொண்டுள்ளது.
அக்.1 முதல் ஊழியர்களின் வேலை நேரம், ஊதியம் மாற்றம் – புதிய தொழிலாளர் குறியீடு அமல்!
தமிழ்நாட்டின் தலைநகரமும், இந்தியாவின் நான்காவது பெரிய நகரமாக சென்னை உள்ளது. 1996 ஆம் ஆண்டிற்கு முன்னர் இந்த நகரம் மதராசு பட்டினம், மெட்ராஸ் மற்றும் சென்னப்பட்டினம் என்றும் அழைக்கப்பட்டு வந்தது. மேலும் சென்னை வங்காள விரிகுடாவின் கரையில் அமைந்த துறைமுக நகரங்களுள் ஒன்று. சுமார் 10 மில்லியன் (ஒரு கோடி) மக்கள் வாழும் இந்நகரம், உலகின் 35 பெரிய மாநகரங்களுள் ஒன்றாக உள்ளது.
இந்நிலையில் பொதுவாக இந்தியாவில் பத்து இலட்சத்திற்கும் கூடுதலான மக்கள்தொகை கொண்ட நகராட்சிகள், மாநகராட்சியாக தகுதி பெற்று மாற்றப்படும். மாநகராட்சி என்பது ஒரு மாநகரம் அல்லது பெருநகர் பகுதியினை உள்ளாட்சி அமைப்பாக செயல்படும். மாநில அல்லது மாகாண அரசுகள் தனியான சட்டங்கள் மூலம் தன்னாட்சி அதிகாரம் இவற்றிற்கு உண்டு. தமிழகத்தில் சென்னை, மதுரை, கோவை, திருச்சி, சேலம் மற்றும் திருநெல்வேலி, தூத்துக்குடி, வேலூர், ஈரோடு, திருப்பூர், தஞ்சாவூர், நாகர்கோவில், ஓசூர், திண்டுக்கல் மற்றும் ஆவடி என 15 மாநகராட்சிகள் உள்ளன. சென்னை பெருநகர மாநகராட்சியாக உள்ளது.
TN Job “FB Group” Join Now
இந்நிலையில் தமிழக அரசு காஞ்சிபுரம், கும்பகோணம், கரூர், கடலூர் மற்றும் சிவகாசி ஆகிய நகராட்சிகள் மாநகராட்சிகளாக தரம் உயர்த்தப்படும் என அறிவித்துள்ளது. மேலும் திருச்சி, நாகர்கோவில், தஞ்சாவூர், ஓசூர் மாநகராட்சிகள் விரிவுபடுத்தப்படும் என்றும் தாம்பரம், பல்லாவரம், செம்பாக்கம், பம்மல், அனகாபுத்தூர் நகராட்சிகளை இணைத்து தாம்பரம் மாநகராட்சி உருவாக்கப்பட உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளப்பட்டி, திட்டக்குடி, மாங்காடு, குன்றத்தூர், நந்திவரம் கூடுவாஞ்சேரி, பொன்னேரி, சோளிங்கர், திருநின்றவூர், இடங்கனசாலை, தாராமங்கலம், திருமுருகன்பூண்டி, கூடலூர், காரமடை, கருமத்தம்பட்டி, மதுக்கரை, வடலூர், கோட்டக்குப்பம், திருக்கோவிலூர், உளுந்தூர்பேட்டை, அதிராம்பட்டினம், மானாமதுரை, சுரண்டை, களக்காடு, திருச்செந்தூர், கொல்லன்கோடு , முசிறி, லால்குடி ஆகிய பேரூராட்சிகள் அதன் வளர்ச்சியடைந்த ஊராட்சிகளை ஒன்றிணைந்து நகராட்சிகளாக மாற்றப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.