தமிழகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட செவிலியர்களிடம் இன்று மாலை பேச்சுவார்த்தை – அமைச்சர் பேட்டி!!
தமிழகத்தில் கொரோனா காலத்தில் ஒப்பந்த அடிப்படையில் நியமனம் செய்யப்பட்ட செவிலியர்கள் தங்களுக்கு பணி நிரந்தரம் செய்யப்பட வேண்டும் என போராட்டம் நடத்தி வருகின்றனர். தற்போது இந்த பணியாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
செவிலியர்கள்
தமிழகம் முழுவதும் கொரோனா கால கட்டத்தில் மருத்துவத் துறையில் காலியாக இருக்கும் பணியிடங்களில் ஒப்பந்த அடிப்படையில் செவிலியர்கள் நியமிக்கப்பட்டனர். இவர்களுக்கு மாதந்தோறும் ரூ.14,000 ஊதியம் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது. அதன்படி, ஒப்பந்த அடிப்படையில் தேர்வு செய்யப்பட்ட செவிலியர்களின் பணிக்காலம் டிசம்பர் மாதத்துடன் முடிவடைந்தது.
நேற்று அதிரடியாக குறைந்த தங்கம் விலை…இன்று மீண்டும் உச்சத்தை தொட்டது – வருத்தத்தில் நகைப்பிரியர்கள்!
அத்துடன் மருத்துவ துறையில் நியமனம் செய்யப்பட்ட ஒப்பந்த செவிலியர் பணியாளர்களுக்கு பணி நீட்டிப்பு வழங்கப்படாது என அரசாணை வெளியிடப்பட்டது. இந்த அறிவிப்புக்கு செவிலியர்கள் சங்கத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டகளத்தில் இறங்கினர். இதையடுத்து இதில் தற்போது 2300 செவிலியர்களுக்கு மீண்டும் பணி அமர்த்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன் 2300 பணியமர்த்துவதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இவர்களுக்கு மாதம் ரூ.18 ஆயிரம் மாத சம்பளமாக பெறுவார்கள் என்றும் கூறியுள்ளார். மேலும் இது தொடர்பாக இவர் கூறியதாவது, தமிழகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் செவிலியர் சங்க நிர்வாகிகளை இன்று 3 மணிக்கு பேச்சுவார்த்தைக்கு அழைத்து உள்ளதாக தெரிவித்துள்ளார்.