ஆப்கானில் பதவியேற்கும் புதிய அரசு – 6 நாடுகளுக்கு அழைப்பு விடுத்த தாலிபான்கள்!
ஆப்கானில் தாலிபான்கள் தலைமையில் புதிய அரசு தலைமையேற்க உள்ளது. இந்த விழாவிற்கு சீனா, ரஷ்யா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ஆப்கானில் புதிய அரசு:
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க ராணுவ படைகள் வெளியேறியதை அடுத்து 20 ஆண்டுகளுக்கு பிறகு தாலிபான்கள் ஆட்சியை கைப்பற்றியுள்ளனர். இவர்களது ஆட்சிக்கு பயந்து மக்கள் வேறு நாடுகளுக்கு தப்பி செல்ல முயன்று வருகின்றனர். தாலிபான்கள் ஆட்சியில் பெண்கள் வெளி இடங்களுக்கு செல்ல அனுமதி இல்லை என்று பல்வேறு கட்டுப்பாடுகள் நிலவுகிறது. இதனால் ஆப்கான் மக்கள் தாலிபான்கள் ஆட்சியை விரும்பவில்லை, தாலிபான்களுக்கு எதிராக பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்ட போதிலும் அதற்கு பயனில்லை.
T20 உலக கோப்பை 2021 – இந்திய அணியில் இடம் பெறப்போவது யார்? உத்தேச பட்டியல்!
இந்த நிலையில் தாலிபான்கள் தலைமையில் அமையவுள்ள புதிய அரசில் முக்கிய பதவி வகிப்பவர்கள் குறித்து அறிவிப்பு வெளியானது. இந்த முக்கிய பதவிகளில் பெண்களுக்கு இடமில்லை எனவும் தாலிபான்கள் தெரிவித்துள்ளனர். இதனை எதிர்த்து பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனாலும் பெண்களுக்கு அரசு பதவிகளில் இடமில்லை என்று தாலிபான்கள் மறுத்து விட்டனர். மேலும் தாலிபான் உயர் தலைவர் ஹைபதுல்லா அகுன் ஜடா தலைமையில், புதிய அரசு அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்திய IT நிறுவன ஊழியர்களுக்கு 9.4% சம்பள உயர்வு – 2022 ஆம் ஆண்டில் திட்டம்!
மேலும் தாலிபான்கள் அமைப்பின் துணைத்தலைவராக உள்ள முல்லா அப்துல் கனி பராதர், நாட்டின் நிர்வாக பொறுப்பையேற்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது ஆப்கானில் புதிய அரசை அறிவிக்கும் பணிகள் முடிவடைந்துள்ளன. தலிபான்கள் தலைமையிலான புதிய அரசு பதவியேற்கும் விழாவிற்கு தாலிபான்கள் ஆட்சிக்கு ஆதரவளித்த நாடுகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி சீனா, ரஷ்யா, துருக்கி, கர்த்தார், பாகிஸ்தான், ஈரான் ஆகிய நாடுகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.