பெண்கள் பொது இடங்களுக்கு செல்ல தடை – ஆப்கானில் தலிபான்களின் புதிய உத்தரவால் பரபரப்பு!

0
பெண்கள் பொது இடங்களுக்கு செல்ல தடை - ஆப்கானில் தலிபான்களின் புதிய உத்தரவால் பரபரப்பு!
பெண்கள் பொது இடங்களுக்கு செல்ல தடை - ஆப்கானில் தலிபான்களின் புதிய உத்தரவால் பரபரப்பு!
பெண்கள் பொது இடங்களுக்கு செல்ல தடை – ஆப்கானில் தலிபான்களின் புதிய உத்தரவால் பரபரப்பு!

ஆப்கானிஸ்தானில் கடந்த ஆண்டு அமெரிக்கா ராணுவ படைகள் வெளியேறியதை அடுத்து தீவிரவாத அமைப்பான தலிபான்கள் ஆட்சியை பிடித்தது. இதனையடுத்து அந்நாட்டில் பெண்களுக்கான உரிமைகள் தொடர்ந்து பறிக்கப்பட்டு வருகிறது.

பூங்கா செல்ல தடை:

ஆப்கானிஸ்தானில் இருந்து கடந்த வருடம் ஆட்சியை கைப்பற்ற தீவிரவாத அமைப்பான தலிபான்கள் கடும் தாக்குதலை நடத்தினர். இதனையடுத்து அமெரிக்க ராணுவ படைகள் ஆப்கானிஸ்தானில் இருந்து படிப்படியாக வெளியேற தொடங்கியது. அதன் பிறகு தலிபான்கள் ஆப்கானில் ஆட்சியை கைப்பற்றினர். கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு பிறகு தலிபான்கள் ஆட்சியை பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow our Instagram for more Latest Updates

இவர்களது ஆட்சியில் பெண்கள் கல்வி கற்க மற்றும் வெளி இடங்களுக்கு செல்ல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. தற்போது அந்நாட்டில் பெண்கள் 6-ம் வகுப்புக்கு மேல் பள்ளிகளுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இது போன்று பெண்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க நாடாளுமன்ற தேர்தலில் இந்திய வம்சாவளியை சேர்ந்த 5 பேர் வெற்றி – அசத்தும் இந்தியர்கள்!

Exams Daily Mobile App Download

அந்த வரிசையில் தற்போது பெண்கள் பூங்காவிற்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது .ஏற்கனவே ஆப்கானில் உள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் ஒரே நாளில் பூங்காவிற்கு செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது. அதனை தொடர்ந்து தற்போது முழுவதுமாக பெண்கள் பூங்கா, உடற்பயிற்சி கூடங்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு அந்நாட்டு பெண்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!