மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியுடன் TA, PF, DR உயர்வு – நிபுணர்கள் கருத்து!!
மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி வரும் ஜூலை மாதம் முதல் உயர்த்தி வழங்கப்பட உள்ள நிலையில் DA தொகை உயர்வுடன், TA, PF, DR மற்றும் கிராஜுவிட்டி படிகளும் உயரும் என்று நிபுணர் குழுவினர் கருத்து தெரிவித்துள்ளனர்.
கொரோனா எதிரொலி:
நாடு முழுவதும் பரவி வந்த கொரோனா நோய்த்தொற்று காரணமாக கடந்த 2020 மார்ச் மாதம் முதல் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால் அரசுக்கு வரி வசூல் பாதிக்கப்பட்டதால் மிகப்பெரிய வருவாய் இழப்பு ஏற்பட்டது. இதனை சரி செய்யும் பொருட்டு மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த 4% அகவிலைப்படி உயர்வை நிறுத்தி வைக்க முடிவு செய்யப்பட்டது.
திமுக சட்டமன்ற தேர்தல் வேட்பாளர் பட்டியல் – மு.க. ஸ்டாலின் வெளியீடு!!
மத்திய அரசின் அறிவிப்பு:
முன்னதாக மத்திய அரசின் அகவிலைப்படி நிறுத்தம் 2021 ஜூலை மாதம் 30ம் தேதி வரை அமலில் இருக்கும் என்று அறிவித்தது. 3 தவணை அகவிலைப்படி கணக்கிட்டு 2021 ஜூலை மாதத்தில் உயர்த்தி வழங்கப்படும் என்று அறிவித்தது. 2021 ஜூலை மாதப்படி மொத்தம் 8% அகவிலைப்படியை உயர்த்தி 25% DA தொகை கணக்கிடப்படுள்ளது.
நிபுணர்களின் கருத்து:
மத்திய அரசு ஊழியர்களின் மாதாந்திர PF பங்களிப்பு மற்றும் கிராஜுவிட்டி அவர்களது சம்பளம் மற்றும் DA அடிப்படை தீர்மானிக்கப்படுகிறது. DA தொகை அதிகரிக்கும் என்பதால் பிஎஃப் மற்றும் கிராஜுவிட்டி கணக்கீடு DA இன் உயர்வுக்கு ஏற்ப அதிகரிக்கும் என்று டிரான்ஸென்ட் கன்சல்டன்ஸின் செல்வ மேலாண்மை நிர்வாக இயக்குனர் கார்த்திக் ஜாவேரி அவர்கள் தெரிவித்துள்ளார்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்