TN TRB வெளியிட்ட முக்கிய அறிவிப்பு 2022 – பாடத்திட்டம் குறித்த முழு விபரங்கள் இதோ!
தமிழகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான தேதி விரைவில் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தேர்வுக்கான புதிய பாடத்திட்டத்தை ஆசிரியர் தேர்வு வாரியம் இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. தற்போது பாடத்திட்டம் மற்றும் தேர்வுக்கு தயாராகும் வழிமுறைகள் குறித்து இப்பதிவில் காண்போம்.
டெட்:
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் குறைந்து வந்த நிலையில் அரசுத்துறை காலிப்பணியிடங்கள் குறித்த அறிவிப்பு வெளியானது. அதனை தொடர்ந்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்பும் பொருட்டு தகுதித்தேர்வு நடத்த திட்டமிடப்பட்டு அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதன் படி கடந்த மார்ச் மாதம் முதல் ஏப்ரல் வரை ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்பபதிவு நடைபெற்றது. ஆசிரியர் தகுதித்தேர்வு 2 தாள்களாக நடத்தப்படுகிறது. முதல் தாளானது இடைநிலை ஆசிரியர்களுக்கானது 12 ஆம் வகுப்பில் 50% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற் D.T.Ed கல்வித் தகுதி பெற்றவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது.
TET தேர்வு எழுதுபவர்கள் கவனத்திற்கு 2022 – ஆசிரியர் தேர்வு வாரியம் முக்கிய அறிவிப்பு!
அதே போல இரண்டாம் தாள் பட்டதாரி ஆசிரியர்களுக்கானது B.Ed கல்வித்தகுதி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். இரண்டாம் தாள் எழுத தகுதி உள்ளவர்கள் முதல் தாளையும் எழுதலாம். விண்ணப்ப பதிவுகள் முடிவடைந்து தேர்வை எதிர்நோக்கி காத்துக் கொண்டிருகின்றனர். இந்த நிலையில் பேப்பர் – 1, பேப்பர் – 2 க்கான பாடத்திட்டம் தேர்வாணையத்தின் அதிகாரபூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. முதல் தாளில் 150 வினாக்கள் கேட்கப்படும். 150 மதிப்பெண்களுக்கு தேர்வு நடைபெறும். இரண்டாம் தாளும் 150 மதிப்பெண்களுக்கு நடைபெறும்.
Exams Daily Mobile App Download
முதல் தாளில் குழந்தை வளர்ச்சி மற்றும் கற்பித்தல் மற்றும் 6 – 11 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு கல்வி உளவியல், மொழிப்பாடம், ஆங்கிலம், கணிதம் ஆகிய பாடங்களில் இருந்து வினாக்கள் வரும். இரண்டாம் தாளில் மொழிப் பாடம், ஆங்கிலம் 30, சம்பந்தப்பட்ட பாடப்பிரிவு -60 மதிப்பெண் என மொத்தம் 150 மதிப்பெண்களுக்கு வினாக்கள் இடம்பெறும். மொழிப்பாடத்தில் சம்பந்தப்பட்ட மொழியின் கூறுகள், தொடர்பு மற்றும் புரிந்து கொள்ளும் திறன்கள் குறித்த கேள்விகள் இடம்பெறும்.